(1)
என்
என்
பால்யத்தை எப்படி
பிரசவிப்பது.சிறு
குழந்தையாக பெற்றெடுக்க
நான்
தாயுமல்லன்;
தந்தையுமல்லன்
இரண்டிற்கும்
நடுவில் என் கனவு,
பூட்டியிருக்கிறது.அதன்
ஓரப் பொந்துகளில் என் பால்யமனத்
துவாரச் சாவியை
கவ்வியபடி பறக்கிறது
ஒரு காகம்
காகத்தின்
திருட்டு வடையை
சுட்டுத் தரும்
மூதாட்டிக்கு
450கோடி ஆண்டுகள்
பூமி வயசு
அவள் மூட்டிய
தீயில்
நூற்றாண்டுகள்
கடந்திட்ட
ஜீவகாருண்ய
தித்திப்பு-
என்றும் ஒரு மிடறு
மிதந்தபடி இருக்கிறது.அதன்
உள்ளோடும் தினசரியை
ஓர் இடமாகப் பார்க்கும்
பேரிளம்பெண்
தன் பால்யத்தை
பெண்மைக்குள்
கைவிட்டு
உயிருள்ள ஜீவனக
வெளியே எடுக்கிறாள்
அதன் ஜுவாலை
மூடாமல்
திறந்தே இருக்கிறது
*********
(2)
அதன் கீழ்
ஒரு சொல்
ஒரே ஒரு சொல்
வாழ்வின் இடையே
பிறக்கிறது,
பிறந்துக் கொண்டே
இறக்கிறது.இறந்ததும்
நதியில் கரைகிறது.அந்
நீரின் அழகிற்கு
உள்ளே
வெளியே
கிடையாது
சுவரில்
அகால மரண
சுவரொட்டி.அதன்
கீழ்
ஒரு மனிதனின்
ஆரம்பம்
முடிவு
ஒன்றைச் சந்திக்கின்றன
*********
(3)
பெயரிடப்பட்ட உணர்ச்சி
குட்டையான இரு மாடுகள்
கோவில் சந்தின் எதிரெதிரே
பெயரிடப்பட்ட ஆதி உணர்ச்சியை
அசைப்போட்டு சுவைக்கின்றன
விதானத்தில்
சம்மணமிட்ட காளையின்
கழுத்துப்பட்டை மணி
யெழுப்பும் ஒலி
கொட்டிச் சிதறுகிறது
பக்தனின்
நேர்ச்சைக்குள்
நெட்டிலிங்க மரத்தின்
ஏதோ ஒரு
முனையை
வருடும்
பக்தனின் பார்வை
முதல் தடவை
புனிதவதியின்
மாயக்கனியை
காண்கிறது
இருமாங் கனிகள்,
முதற் கனியை ஈகை உண்ண
பின்னது,கனவனின் பசியை உண்டது
மூன்றாவதாக பிறந்த
தவக்கனியைக் கண்டு
கட்டியவன் மறைந்தான்.அவன்
புசிக்காத ஒரு கனி
ஒரேயொரு கனி
காலம் காலமாய்
உருட்டுகிறது
நம் தலையை
*********
(4)
மீகாலம்
மீகாலத்தின் உருவகம், அக்னிகுஞ்சு
பறக்கத் தொடங்கியாயிற்று
அடிவானத்திற்குள்
பறக்கத் தெரியாதப் பறவை
ஆகாயம்
மேல்
கீழ்
அல்ல
இரண்டும் தாண்டி அதன்
கூடு.பறவை,திசையறிந்து பறக்கும்
பண்பாட்டு உருண்டை.எப்படி நான்
உருண்டையை
உருண்டையாகப் பார்ப்பது.அம்
முழுமை வாள் உன்,
என் தலையை
ஒரே வீச்சில் கொய்ததே
உருளும் முகத்தில் தொங்குகிறது
நம் அடையாளப் பட்டை.அதன்
கடினத்தில் என்றைக்கும்
அதிகாரத்தின் தடயம்
எனக்கு-
அக்னி குஞ்சல்ல;
நொய்யலாற்றின் மேல் சுற்றும்
கதைசொல்லி காக்கையின்
பொன்குஞ்சு முக்கியம்
முட்டையில் கூளமாகாதக்
குஞ்சுகள்,நிகழ்காலத் தரையில்
தாவித்தாவி
கடந்தக் காலத்திற்குப் போய்
இரையெடுத்து திரும்பும் குஞ்சுகள்
அன்றாடத்தை
ஒரு முட்டையாகச்
சுமக்கும் நான்,
முற்கால தடாகத்தில் என்
புனைவுப் புரவிகளை
தாகம் தனிக்க
லாயத்தில் கட்டுகிறேன்.அங்கே
அவிழ்ந்து ஓடும் என் புரவிகளுக்கு
புவிக்கு அப்பால் விளிம்பே கிடையாது
Friday, February 5, 2010
Tuesday, January 26, 2010
கடற்கரய் கவிதைகள்
(1)
பழுக்காத இலை
காலம் மாறாமல்
தருநிழல் ஓரம் அமர்ந்து
நான்கு பேர் சதாப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
வழவழப்பான ஃபோர்னோ புத்தகம்,முதல் சுயமைதுனம்
தீட்டுத் துணி,பூப்பெய்திய ஜூலி அக்கா என,அவர்கள்
வார்த்தைப் பூதம் வளர்ந்து தரைத் தட்டி நிற்கிறது
அப்போது
பருவத்தின் முகவாசல் வழியே புகுந்து
புறவாசல் வழியே வெளியேறுகிறது, இளமான் ஒன்று
நால்வரில் ஒருவன் வெளிர் மஞ்சள்நிற
அவ்விளமானை பார்க்கிறான்
மேயாத மானை.
மேயாதமானை மாயமான் விரட்டுகிறது
முன்னவள் கண்ணில் விழுந்த மான்
பின்னவன் கண்ணில் காணாமல் மறைந்தது
இருஜோடி
இமையை திறந்து-
ஒரே நேரத்தில் நான்கு கண்களுக்குள்
உள்ளே இறங்குகிறான் ஒருவன்
அப்போது
மான் ஓட்டத்திற்கு தக்க
தலையில் நரை பரவ ஆரம்பிக்கிறது ஒருவனுக்கு
மீதம் மூவர் புள்ளிமானின் வேகத்தை பின்தொடர்கிறார்கள்
நண்பர்களுக்கும் மானுக்குமான இடைவெளி-அங்கே
ஒரு சிறுகல் தோட்டம்.அதற்குள் அகண்ட நந்தவனம்
மாயமானை மேயவிடுகிறேன்
காலம் மாறாது, நால்வர் அமரும் அம்மரக் கிளையில்
ஒரு பச்சை இலையும் பழுப்பதேயில்லை
(2)
என் ஏழுக்கழுதைகள்
எனக்கு ஏழுக்கழுதை வயசாகிவிட்டது
வளர்ந்து நடைபழகிய நாலாவது மாசம்,கக்குவான் பயத்தில்
பாலாடைக்கட்டியில் அம்மா கழுதைப்பால் ஊட்டிய தேதியில்-
என் முதல்கழுதையோடு நான் சிநேகிதம் கொண்டேன்
பசங்களோடு தள்ளுமுள்ளு நடத்தி
பள்ளிச்சீருடையில் தார்பூசி கொண்டதற்காக
அப்பா சுண்டுவிரல் பிடித்தப்போய்
வண்ணாந்துறைக் குட்டிக்கழுதைக்கு நான் பெயர்ச்சூட்டி
அழைத்த அன்றைக்கு- என் வயிற்றுகுள்
இரண்டாவது கழுதை வளர ஆரம்பித்தது
உடும்புப்பிடியவிழ்க்க ஏழுகழுதைகள் காதில்
கட்டெறுப்பை கடிக்கவிட்டு
உரக்கக் கத்திய பின், பிடியவிழுக்கும் தந்திரம் பற்றிப்
பாட்டி கதைவிட்ட அன்று
என் மூன்று கழுதைகளை உறவுக்கு விட்டேன். என்
நாலாவது கழுதையோடுதான் பாரதி அக்ரஹாரத்திற்குள் நுழைந்தான்
ஜான் ஆப்ரஹானை படித்தக் காலத்தில்
எனக்கு ஐந்துகழுதை வயசு பூர்தியாகிவிட்டது
என் ஆறாவது கழுதை வளர்ந்ததும்
ஓட்டிக்கொண்டு நகரத்திற்கு வந்துசேர்ந்தேன்
இப்போது என் ஏழாவது கழுதை
மேஜையில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கிறது
தீரா ஆசையை,
தீர்ந்த வாழ்க்கையை
(3)
என் என்றுகள்
எல்லாம் சொல்கிறார்கள்:
என்னால் முடியும் என்று.எனக்கு இலகுவா
னதென்று.எனக்கு இது சின்னக் காரியம் என்று
மனம் வைத்தால் நடத்திவிடலாம் என்று
நையா பைசா செலவில்லை என்று
என்று என்று என்று
என்று என்று என்று
அறியாமை நட்சத்திரம் என் வானில் தட்டி நிற்கிறது
பிடுங்கி வெளியில் வீசுகிறேன் அதை.ஊருக்கு அப்பால்
அதன் ஒளியை காஃபி ஆற்றுவது போல
ஊதி ஊதி குழந்தைக்கு ஊட்டுகிறாள் அம்மா.ஒளியின்
கூர்மை கொஞ்சம் தரையில் சிந்துகிறது.அந்தக் கறையை
நக்கும் கோம்பை நாய்க்கு நாக்கேயில்லை
அவர்கள் தராசில்,எனது என்று.எடை கூடுகிறது எப்பவும்
கர்ணன் தர்மத்தட்டில் என் என்று.அரிந்து வைக்க வாளை உருவினேன்
உறைக்கு வெளியே,புறாக்களுடன் பல என்றுகள் படப்படக்கின்றன
புறா நகக்கணுவில் வளரும் என் சின்ன காரியங்களை
என் தட்டில் இறக்கிவைத்தவன் -
பிட்டுக்கு மண்சுமந்தவன்.
ஆட்டுக்குட்டிக்கு உடன் நின்றவன்.பாலை
மேட்டுக்குள் பண்பை வகுத்தவன்.
சின்னபாரம்
பெரியதாக கனம்
சின்னவரம்.பெரிய பலன்
எனக்கு ஒரே சங்கடம்
அவர்கள் என்னை பார்க்க முடிவதைபோல்
வெளியில் இருந்து
என்னை நானே பார்க்க முடிந்தால்
எவ்வளவு நல்லது
(4)
தொலைந்து போதல்:1
ஒரு நண்பனின் நண்பரை, இன்னொரு நண்பருக்கு அறிமுகம் செய்ய
நண்பனின் நண்பர் வீட்டுக்குப் போனேன்
அந்த நண்பனின் நண்பன், அறிமுக நண்பனையும் என்னையும்
பத்மாவதி மண்டபம் பக்கம் நிற்கும் வீட்டுக்கு
பொட்டிக்கடை அடையாளம் என்றான்
பத்மாவதி பத்மாவதி என முணுமுணுத்தன என் உதடுகள்
நடக்கும் வழி மறித்து
வெடித்து உதிரும் கூந்தல்பனை பூக்கொட்டி
என் ஞாபகப் பலகை முறிந்து போனது.பனைகரு
வளையங்களிலிருந்து என் மரபுவழியே நடக்கத் தொடங்கினேன்
மண்டபம் அறிந்த நாங்கள்
அந்த நண்பனின் நண்பன்
வீட்டை பார்த்தோம்:
அவன் ஒளித்து வைத்த வீடு,
கண்டுபிடிக்க கண்டுபிடிக்க எங்கோ
மறைந்து மறைந்து நகர்கிறது
தொலைந்து போதல்:2
இன்று சிறுமியைக் கடத்திக்
கொண்டு போனவர்கள் யார், தெரியாது
டி.வி.யில் செய்திப் படித்தவளுக்கு
இதே ஏக்கம் இருந்திருக்கலாம்
யாருக்கும் யாருக்கும் இடையில்
எத்தனை செ.மீட்டர் அளவுக்
காணாமல் போனால் அவள்
எட்டித் தொட முடிகின்ற
என் மூளைக்கு எட்டாத தூரம்
ஃபேன் காற்றைப் போல சோகத்தை
குறைத்து கூட்ட முடிந்தால் எவ்வளவு நல்லது.அல்லது
ஒரு ரேடியோ பெட்டியின் திசைமுள் இருந்தால்
நிலையத்தை தாண்டி, கொஞ்சம்
தள்ளிப் போயாவது நிறுத்தலாம்
சிறுமி,திரும்பும் திசையை கயல் உள் ஒளித்தவள்
கையிருப்பு தீர்ந்த கையோடு வீடு திரும்பக் கூடும்
அன்று வீட்டின் சோகத்தை ஒரு
துடப்பத்தால் வெளியே தள்ளிவிட்டுவிடலாம்
அல்லது
மூளைக்கும்
கைமறதிக்கும்
இடையில்
வைத்தாவதுவிடலாம்
(5)
அனாதிகால குறத்தி
தெருக்களில் ஆடிக் கொண்ருந்த பிள்ளைகள்
போன இடத்தில் அப்படியே அப்படியே வளர்ந்துவிட்டார்கள்
மஞ்சள் சாமந்தியைப் போல
தீராத விளையாட்டுப் பிள்ளை
இப்போது தெருக்களில் இல்லை
சரக்கொன்றை மலர் மாதிரி
இருந்ததும்,
மிச்ச சொச்சமாய் மறைந்தன,
பசலைப் பந்தல்கள்
பித்தளைப் பாத்திரத்தின் மகத்துவமான வெளிச்சத்தை
சில்வர் தட்டுகள் செயலிழக்கச் செய்துவிட்டன
மண் பாண்டங்களை பித்தளை தின்றதும், அவ்வாறே
மண்.பித்தளை.சில்வர்.என,சிறுகிளையில்
மலர்கிறது காலம்,பெரிதாக
சூரியகாந்தி பூப்போல.அதன்
அல்லிவட்டம்
புள்ளிவட்டம்
அயல்மகர்ந்தச்சேர்க்கை
எல்லாம் தாண்டி
நிற்கிறது ஒரு
பன்னாட்டு நரி.
அதன் கொம்பைப் பிடுங்க
பஜாரில் திரிகிறாள்
ஓர் அனாதிகால குறத்தி.
அவளது பழமை
தாராளக்கொள்கையை
கொஞ்சம் கொஞ்சமாக
துடைத்துக் கொண்
டு
ள்
ள
து
(6)
பங்கு
பெரிய மனிதர் போர்வையில்
தீங்கு செய்ததாக
டி.வி.யில் காட்டுகிறார்கள் ஒருவரை
அவர் தன் தலையை, துண்டைப்போட்டு
ஒளித்துவைக்கிறார்.
பத்திரிகைகள் அவர் தலையைத் தேடுகின்றன
டி.வி.க்கு வெளியே தலையைத் தொலைத்தவனை பார்த்து
"இது என்ன ஜென்மமோ "என்கிறாள் ஒருத்தி-
அண்டை வீட்டுச் சுவருக்குள் தொங்கும்
அடுக்கு செம்பருத்தியை ஒடித்து
புடவை முந்தியில் மறைத்த படி.
பெரணிச் செடியைவிட்டு இறங்கிய நத்தை
தன் பங்கிற்கு
தரையில் எதையோ எழுதிச் செல்கிறது
(7)
கண்ணாடிக் கிணறு
எனக்கு கண்கள் கண்ணாடியில் இருக்கின்றன
கீழே விழுந்து,தரையில் உடையும் கண்ணாடிக் கண்கள்
கூடிக் கூடி மூன்றாம் கண் ஆகிறது
மூக்கின் வரம்பில் ஒரு கண்ணாடி.முகம் காட்ட
மறு கண்ணாடி.ஒரு கண்ணாடி,புகுந்து
இன்னொரு கண்ணாடிக்கு போகிறது.வெளிக்கண்ணாடி,
புகுந்து முதல் கண்ணாடிக்கு திரும்புகிறது.புகுந்து
புகுந்து போகிறேன்.அங்கே
சலூன்கடை பெரிய கண்ணாடி.எனக்கு அதில்
நான்கு உடல்கள்.முகத்தின் முன்னே இரு உடல்கள்
முதுகுவுக்கு பின்னே இரண்டு உடல்கள்.பிம்பங்கள்
மோதும் ஓர் இடத்தில் ஐந்து இருக்கைகள்.என் ஐந்து
இருக்கையிருந்து ஓர் உடலாக வெளியேறுகிறேன்.என் ஓர்
உடலிலிருந்து வெளியேறிய நான்கு உடல்கள்
ஒவ்வொன்றாக இடறி கிணற்றில் விழுகின்றன,ஆண்டாளின்
கண்ணாடிக் கிணற்றில்.கிணற்று அடியில்
சரலைக்கல்போல அலையுறுகிறது ஆண்டாளின் முகம்.அதன்
இயலை கல்சிற்பம் ஒன்று,நூற்றாண்டுக்கு வெளியே காவல் காக்கிறது.
கற்சிலை வெளியே,உள்ளே
என் அவமானங்கள்-
என்னை கேலி செய்கின்றன
வீடு திரும்புகிறேன்
உனக்கு கண்கள் முகத்தில் இல்லை.
அம்மா திட்டுகையில்,தினசரி எனக்கு
எப்போதும் புறமுதுகில் கண்கள்
(8)
பருவ மேடு
மூன்று பேர்கள்,
தீராதப் பருவ மேட்டில் அமர்ந்து
கதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
கூடவே அருகம்புல் ஒன்று கதைக்கேட்டு வளர்கிறது
அதன் வீம்பு மூவர் தலையில் கருமையாக படர்ந்து கொண்டிருக்கிறது,
ஒரு கதை தொடக்கத்திற்கும்,
முடிவுக்குமான தூரம்- மூன்றுபேரில் ஒருவன்
வளர்ந்து கதைக்குள்ளிருந்து வெளியேறினான்
மீதம் இருவரின் கையசைப்பில் மறுபடி வளர்கிறது புல்
காலமற்று கதையின் உள்ளே உட்கார்ந்து,
கதைக் கேட்டபடி இருக்கிறார், ஒரு ஊருல ஒரு ராஜா
கதைக்கு வெளியிலிருந்து அவருக்கு கதை சொன்னார்கள் சிறார்கள்
ஊரறிந்த ராஜவுக்கு, கதையின் உள்ளே ஒன்றும் தெரிவதில்லை.
மங்களாக மிதக்கும் வார்த்தைகளை அவர் பொறுக்கித்தின்பதோடு சரி
சூரியன் திரும்பாத பருவ இருட்டில்
சிறுவர்கள் பிடித்து வைத்த பொண்வண்டு வெளிச்சத்தில்
மிதக்கிறது, சலனமற்றக் காடு
காட்டின் பருவ முட்டைகளை புசித்தப் பிள்ளைகள்
கரையிலிருந்து போய் சேர்கிறார்கள்,மறுபடி கதைக்குள்
பழுக்காத இலை
காலம் மாறாமல்
தருநிழல் ஓரம் அமர்ந்து
நான்கு பேர் சதாப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
வழவழப்பான ஃபோர்னோ புத்தகம்,முதல் சுயமைதுனம்
தீட்டுத் துணி,பூப்பெய்திய ஜூலி அக்கா என,அவர்கள்
வார்த்தைப் பூதம் வளர்ந்து தரைத் தட்டி நிற்கிறது
அப்போது
பருவத்தின் முகவாசல் வழியே புகுந்து
புறவாசல் வழியே வெளியேறுகிறது, இளமான் ஒன்று
நால்வரில் ஒருவன் வெளிர் மஞ்சள்நிற
அவ்விளமானை பார்க்கிறான்
மேயாத மானை.
மேயாதமானை மாயமான் விரட்டுகிறது
முன்னவள் கண்ணில் விழுந்த மான்
பின்னவன் கண்ணில் காணாமல் மறைந்தது
இருஜோடி
இமையை திறந்து-
ஒரே நேரத்தில் நான்கு கண்களுக்குள்
உள்ளே இறங்குகிறான் ஒருவன்
அப்போது
மான் ஓட்டத்திற்கு தக்க
தலையில் நரை பரவ ஆரம்பிக்கிறது ஒருவனுக்கு
மீதம் மூவர் புள்ளிமானின் வேகத்தை பின்தொடர்கிறார்கள்
நண்பர்களுக்கும் மானுக்குமான இடைவெளி-அங்கே
ஒரு சிறுகல் தோட்டம்.அதற்குள் அகண்ட நந்தவனம்
மாயமானை மேயவிடுகிறேன்
காலம் மாறாது, நால்வர் அமரும் அம்மரக் கிளையில்
ஒரு பச்சை இலையும் பழுப்பதேயில்லை
(2)
என் ஏழுக்கழுதைகள்
எனக்கு ஏழுக்கழுதை வயசாகிவிட்டது
வளர்ந்து நடைபழகிய நாலாவது மாசம்,கக்குவான் பயத்தில்
பாலாடைக்கட்டியில் அம்மா கழுதைப்பால் ஊட்டிய தேதியில்-
என் முதல்கழுதையோடு நான் சிநேகிதம் கொண்டேன்
பசங்களோடு தள்ளுமுள்ளு நடத்தி
பள்ளிச்சீருடையில் தார்பூசி கொண்டதற்காக
அப்பா சுண்டுவிரல் பிடித்தப்போய்
வண்ணாந்துறைக் குட்டிக்கழுதைக்கு நான் பெயர்ச்சூட்டி
அழைத்த அன்றைக்கு- என் வயிற்றுகுள்
இரண்டாவது கழுதை வளர ஆரம்பித்தது
உடும்புப்பிடியவிழ்க்க ஏழுகழுதைகள் காதில்
கட்டெறுப்பை கடிக்கவிட்டு
உரக்கக் கத்திய பின், பிடியவிழுக்கும் தந்திரம் பற்றிப்
பாட்டி கதைவிட்ட அன்று
என் மூன்று கழுதைகளை உறவுக்கு விட்டேன். என்
நாலாவது கழுதையோடுதான் பாரதி அக்ரஹாரத்திற்குள் நுழைந்தான்
ஜான் ஆப்ரஹானை படித்தக் காலத்தில்
எனக்கு ஐந்துகழுதை வயசு பூர்தியாகிவிட்டது
என் ஆறாவது கழுதை வளர்ந்ததும்
ஓட்டிக்கொண்டு நகரத்திற்கு வந்துசேர்ந்தேன்
இப்போது என் ஏழாவது கழுதை
மேஜையில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கிறது
தீரா ஆசையை,
தீர்ந்த வாழ்க்கையை
(3)
என் என்றுகள்
எல்லாம் சொல்கிறார்கள்:
என்னால் முடியும் என்று.எனக்கு இலகுவா
னதென்று.எனக்கு இது சின்னக் காரியம் என்று
மனம் வைத்தால் நடத்திவிடலாம் என்று
நையா பைசா செலவில்லை என்று
என்று என்று என்று
என்று என்று என்று
அறியாமை நட்சத்திரம் என் வானில் தட்டி நிற்கிறது
பிடுங்கி வெளியில் வீசுகிறேன் அதை.ஊருக்கு அப்பால்
அதன் ஒளியை காஃபி ஆற்றுவது போல
ஊதி ஊதி குழந்தைக்கு ஊட்டுகிறாள் அம்மா.ஒளியின்
கூர்மை கொஞ்சம் தரையில் சிந்துகிறது.அந்தக் கறையை
நக்கும் கோம்பை நாய்க்கு நாக்கேயில்லை
அவர்கள் தராசில்,எனது என்று.எடை கூடுகிறது எப்பவும்
கர்ணன் தர்மத்தட்டில் என் என்று.அரிந்து வைக்க வாளை உருவினேன்
உறைக்கு வெளியே,புறாக்களுடன் பல என்றுகள் படப்படக்கின்றன
புறா நகக்கணுவில் வளரும் என் சின்ன காரியங்களை
என் தட்டில் இறக்கிவைத்தவன் -
பிட்டுக்கு மண்சுமந்தவன்.
ஆட்டுக்குட்டிக்கு உடன் நின்றவன்.பாலை
மேட்டுக்குள் பண்பை வகுத்தவன்.
சின்னபாரம்
பெரியதாக கனம்
சின்னவரம்.பெரிய பலன்
எனக்கு ஒரே சங்கடம்
அவர்கள் என்னை பார்க்க முடிவதைபோல்
வெளியில் இருந்து
என்னை நானே பார்க்க முடிந்தால்
எவ்வளவு நல்லது
(4)
தொலைந்து போதல்:1
ஒரு நண்பனின் நண்பரை, இன்னொரு நண்பருக்கு அறிமுகம் செய்ய
நண்பனின் நண்பர் வீட்டுக்குப் போனேன்
அந்த நண்பனின் நண்பன், அறிமுக நண்பனையும் என்னையும்
பத்மாவதி மண்டபம் பக்கம் நிற்கும் வீட்டுக்கு
பொட்டிக்கடை அடையாளம் என்றான்
பத்மாவதி பத்மாவதி என முணுமுணுத்தன என் உதடுகள்
நடக்கும் வழி மறித்து
வெடித்து உதிரும் கூந்தல்பனை பூக்கொட்டி
என் ஞாபகப் பலகை முறிந்து போனது.பனைகரு
வளையங்களிலிருந்து என் மரபுவழியே நடக்கத் தொடங்கினேன்
மண்டபம் அறிந்த நாங்கள்
அந்த நண்பனின் நண்பன்
வீட்டை பார்த்தோம்:
அவன் ஒளித்து வைத்த வீடு,
கண்டுபிடிக்க கண்டுபிடிக்க எங்கோ
மறைந்து மறைந்து நகர்கிறது
தொலைந்து போதல்:2
இன்று சிறுமியைக் கடத்திக்
கொண்டு போனவர்கள் யார், தெரியாது
டி.வி.யில் செய்திப் படித்தவளுக்கு
இதே ஏக்கம் இருந்திருக்கலாம்
யாருக்கும் யாருக்கும் இடையில்
எத்தனை செ.மீட்டர் அளவுக்
காணாமல் போனால் அவள்
எட்டித் தொட முடிகின்ற
என் மூளைக்கு எட்டாத தூரம்
ஃபேன் காற்றைப் போல சோகத்தை
குறைத்து கூட்ட முடிந்தால் எவ்வளவு நல்லது.அல்லது
ஒரு ரேடியோ பெட்டியின் திசைமுள் இருந்தால்
நிலையத்தை தாண்டி, கொஞ்சம்
தள்ளிப் போயாவது நிறுத்தலாம்
சிறுமி,திரும்பும் திசையை கயல் உள் ஒளித்தவள்
கையிருப்பு தீர்ந்த கையோடு வீடு திரும்பக் கூடும்
அன்று வீட்டின் சோகத்தை ஒரு
துடப்பத்தால் வெளியே தள்ளிவிட்டுவிடலாம்
அல்லது
மூளைக்கும்
கைமறதிக்கும்
இடையில்
வைத்தாவதுவிடலாம்
(5)
அனாதிகால குறத்தி
தெருக்களில் ஆடிக் கொண்ருந்த பிள்ளைகள்
போன இடத்தில் அப்படியே அப்படியே வளர்ந்துவிட்டார்கள்
மஞ்சள் சாமந்தியைப் போல
தீராத விளையாட்டுப் பிள்ளை
இப்போது தெருக்களில் இல்லை
சரக்கொன்றை மலர் மாதிரி
இருந்ததும்,
மிச்ச சொச்சமாய் மறைந்தன,
பசலைப் பந்தல்கள்
பித்தளைப் பாத்திரத்தின் மகத்துவமான வெளிச்சத்தை
சில்வர் தட்டுகள் செயலிழக்கச் செய்துவிட்டன
மண் பாண்டங்களை பித்தளை தின்றதும், அவ்வாறே
மண்.பித்தளை.சில்வர்.என,சிறுகிளையில்
மலர்கிறது காலம்,பெரிதாக
சூரியகாந்தி பூப்போல.அதன்
அல்லிவட்டம்
புள்ளிவட்டம்
அயல்மகர்ந்தச்சேர்க்கை
எல்லாம் தாண்டி
நிற்கிறது ஒரு
பன்னாட்டு நரி.
அதன் கொம்பைப் பிடுங்க
பஜாரில் திரிகிறாள்
ஓர் அனாதிகால குறத்தி.
அவளது பழமை
தாராளக்கொள்கையை
கொஞ்சம் கொஞ்சமாக
துடைத்துக் கொண்
டு
ள்
ள
து
(6)
பங்கு
பெரிய மனிதர் போர்வையில்
தீங்கு செய்ததாக
டி.வி.யில் காட்டுகிறார்கள் ஒருவரை
அவர் தன் தலையை, துண்டைப்போட்டு
ஒளித்துவைக்கிறார்.
பத்திரிகைகள் அவர் தலையைத் தேடுகின்றன
டி.வி.க்கு வெளியே தலையைத் தொலைத்தவனை பார்த்து
"இது என்ன ஜென்மமோ "என்கிறாள் ஒருத்தி-
அண்டை வீட்டுச் சுவருக்குள் தொங்கும்
அடுக்கு செம்பருத்தியை ஒடித்து
புடவை முந்தியில் மறைத்த படி.
பெரணிச் செடியைவிட்டு இறங்கிய நத்தை
தன் பங்கிற்கு
தரையில் எதையோ எழுதிச் செல்கிறது
(7)
கண்ணாடிக் கிணறு
எனக்கு கண்கள் கண்ணாடியில் இருக்கின்றன
கீழே விழுந்து,தரையில் உடையும் கண்ணாடிக் கண்கள்
கூடிக் கூடி மூன்றாம் கண் ஆகிறது
மூக்கின் வரம்பில் ஒரு கண்ணாடி.முகம் காட்ட
மறு கண்ணாடி.ஒரு கண்ணாடி,புகுந்து
இன்னொரு கண்ணாடிக்கு போகிறது.வெளிக்கண்ணாடி,
புகுந்து முதல் கண்ணாடிக்கு திரும்புகிறது.புகுந்து
புகுந்து போகிறேன்.அங்கே
சலூன்கடை பெரிய கண்ணாடி.எனக்கு அதில்
நான்கு உடல்கள்.முகத்தின் முன்னே இரு உடல்கள்
முதுகுவுக்கு பின்னே இரண்டு உடல்கள்.பிம்பங்கள்
மோதும் ஓர் இடத்தில் ஐந்து இருக்கைகள்.என் ஐந்து
இருக்கையிருந்து ஓர் உடலாக வெளியேறுகிறேன்.என் ஓர்
உடலிலிருந்து வெளியேறிய நான்கு உடல்கள்
ஒவ்வொன்றாக இடறி கிணற்றில் விழுகின்றன,ஆண்டாளின்
கண்ணாடிக் கிணற்றில்.கிணற்று அடியில்
சரலைக்கல்போல அலையுறுகிறது ஆண்டாளின் முகம்.அதன்
இயலை கல்சிற்பம் ஒன்று,நூற்றாண்டுக்கு வெளியே காவல் காக்கிறது.
கற்சிலை வெளியே,உள்ளே
என் அவமானங்கள்-
என்னை கேலி செய்கின்றன
வீடு திரும்புகிறேன்
உனக்கு கண்கள் முகத்தில் இல்லை.
அம்மா திட்டுகையில்,தினசரி எனக்கு
எப்போதும் புறமுதுகில் கண்கள்
(8)
பருவ மேடு
மூன்று பேர்கள்,
தீராதப் பருவ மேட்டில் அமர்ந்து
கதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
கூடவே அருகம்புல் ஒன்று கதைக்கேட்டு வளர்கிறது
அதன் வீம்பு மூவர் தலையில் கருமையாக படர்ந்து கொண்டிருக்கிறது,
ஒரு கதை தொடக்கத்திற்கும்,
முடிவுக்குமான தூரம்- மூன்றுபேரில் ஒருவன்
வளர்ந்து கதைக்குள்ளிருந்து வெளியேறினான்
மீதம் இருவரின் கையசைப்பில் மறுபடி வளர்கிறது புல்
காலமற்று கதையின் உள்ளே உட்கார்ந்து,
கதைக் கேட்டபடி இருக்கிறார், ஒரு ஊருல ஒரு ராஜா
கதைக்கு வெளியிலிருந்து அவருக்கு கதை சொன்னார்கள் சிறார்கள்
ஊரறிந்த ராஜவுக்கு, கதையின் உள்ளே ஒன்றும் தெரிவதில்லை.
மங்களாக மிதக்கும் வார்த்தைகளை அவர் பொறுக்கித்தின்பதோடு சரி
சூரியன் திரும்பாத பருவ இருட்டில்
சிறுவர்கள் பிடித்து வைத்த பொண்வண்டு வெளிச்சத்தில்
மிதக்கிறது, சலனமற்றக் காடு
காட்டின் பருவ முட்டைகளை புசித்தப் பிள்ளைகள்
கரையிலிருந்து போய் சேர்கிறார்கள்,மறுபடி கதைக்குள்
Thursday, December 31, 2009
ஏழைகளுக்கு ஒதுக்கும் நிதியை புத்திசாலிகள் அபகரித்துவிடுகிறார்கள்-அஜய் மேத்தா
இந்திய அறக்கட்டளை நிறுவனம் இலாப நோக்கமில்லாது, நாட்டுப்பணி செய்து வருகிறது. இந்தத் தன்னார்வத் தொண்டு அமைப்பின் செயல் இயக்குநராக 2001 ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வருபவர் அஜய் மேத்தா.
இவர் 1990_1999 வரை உதய்ப்பூரில் உள்ள ‘சேவா மந்திர்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தியவர். இந்தத் தொண்டு நிறுவனம் நாட்டுப்புற ஏழைமக்களுக்கு அனைத்து துறையிலும் மேம்பட உதவி செய்து வருகிறது. இன்று அது உலகளாவிய கவனத்தைப் பெற்று இருக்கிறது.
இப்படி தொண்டு செய்வதில் ஏற்படும் ஊழல் குறித்த விஷயங்களை ஆராய்ந்து பேசி ஒரு விழிப்புணர்வை உண்டாக்க முயல்பவர் இவர் சமீபத்தில் சென்னையிலுள்ள தேசிய நாட்டுப்புற உதவி மையத்தில் ஒரு உரை நிகழ்த்த வந்திருந்தார். அவரை சந்தித்து பேசினோம்.
தீராநதி: பெரும்பாலனவர்கள் தர்மம் செய்கிறோம் என்ற மனோபாவத்தை ஒட்டியே தான தர்மங்களை செய்கிறார்கள். சிலர் இது நம்முடைய தார்மீக அறக்கடமை என்ற நோக்கிலும் செய்கிறார்கள் எதிர்காலத்தில் அரசியல், பொருளாதார ஆதாயம் பெறுவதற்காக, அறக்கொடைகள் என்ற போர்வையில் கொடுக்கிறார்கள். உங்கள் பார்வையில் இவையெல்லாம் எப்படிபடுகிறது? நீங்கள் எப்படி இந்த நிதியுதவிகளை பார்க்கிறீர்கள். உங்களுக்கு தொண்டு நிறுவனங்களுடன் நீண்டகாலம் அனுபவம் இருக்கிறது. உங்கள் அனுபவம், சிந்தனையை … பகிர்ந்து கொள்ள முடியுமா?
அஜய்மேத்தா : இந்தியாவில் தர்ம காரியங்கள் செயல்படுவதற்கான தூண்டுகோல்கள்; நோக்கங்கள் பலவாகும், இதுதான் என்று பிரித்துக் காட்ட முடியாது. நீங்கள் சொன்னவைக்குள் அனைத்துமே இருக்கின்றன. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, காந்தி தன் ஆளுமையினால் பல செல்வந்தர்களை தர்மகாரியங்களில் ஈடுபட வைத்தார்; அவர்களின் மனசாட்சியை எழுப்ப அது வல்லதாய் இருந்தது. மகாத்மா காந்தியின் நடத்தை அவர்கள் தர்மம் செய்வதாக எண்ணாமல் தம் சமூகக் கடமை இது என உணரும்படிச் செய்தார் அவர் வகுத்தளித்த ‘தர்மகர்த்தா கோட்பாடு’ ஒரு தீர்க்கதரிசியின் தொலைநோக்குப் பார்வையாகும். அது மரபாக வளராமல் போய்விட்டது வருத்தப்பட வேண்டியதாகும். அந்தக் காலத்திய பெரும் பணக்கார வணிகர்களின் அறவுணர்வுகளை எழுப்பி செயல்படச் செய்தது மகாத்மாவின் மேதையாகும். இப்போதுள்ள பெரும் சவால் என்னவெனில், உதவும் எண்ணமுள்ளவர்களிடம் நம்பும்படியாக தன்னார்வ அமைப்புகள் தம் செயல்பாட்டினாலும் நடத்தையினாலும் இயங்கவேண்டும். நான், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது வருத்தப்படுவது என்னவெனில், கொடையாளர்கள் சமுதாயத்தில் நிலவும் சிக்கலைக் காண மறுக்கிறார்கள். ஏதோ தாங்கள் தர்மம் செய்கிறோம் என எண்ணிவிடுகிறா£கள். கல்வி நிறுவனங்களுக்கு உதவு வது; அடித்தட்டு மக்களுக்கு ஏதோ செய்வது என்பதோடு நின்றுவிடுகிறார்கள். ஆத்மார்த்தமாக புரிந்து கொள்ளவும் இல்லை என்பதுதான் என் வருத்தமாகும். ஏழை மக்களுக்கு கல்வி கொடுக்கும் நிறுவனங்கள் நீண்டகாலம் நிலைத்து இருக்க வேண்டும், என்ன மாற்றங்களை ஏற்படுத்த போகிறோம் என்பதை பத்தியெல்லாம் சிந்திப்பதேயில்லை. வளர்ந்துவரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும், பெருகிவரும் செலவும் எப்படி ஏழைமக்களுக்கும் போகிறது என்பதில் எந்த உணர்வும் இல்லை, ஏதோ தர்மம் செய்துவிட்டதாகவே எண்ணிவிடுகின்றனர். இந்தப்போக்கு சரியானது அல்ல என்றுதான் சொல்வேன். தரமான கல்வியை கொடுக்க வேண்டும்; சிறப்பான பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நினைப்பும் இல்லை; பண உதவியோடு நிறுத்தி விடுகின்றனர். எந்தச் சூழலில் மக்கள் சமுதாயம் இருக்கிறது என்பதை எல்லாம் புரிந்து கொள்ளுவதில்லை.
தீராநதி: உங்கள் அனுபவத்தின்படி, இந்தியாவில் அறக்கொடை வழங்கக்கூடியவர்களுக்குப் பெரும் சவாலாக முன் நிற்பது என்ன? அறக்கொடை செய்ய விரும்புகிறார்கள்; முன் வருகிறார்கள்; ஆனால் செய்வதற்கு இடையூறாக அல்லது இடர்ப்பாடாக இருப்பது என்ன என்பதை விளங்கச் சொல்லுங்கள்?
அஜய்மேத்தா : நாம் சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. நம் மக்கள் முன்னேறுவதற்காக என்னவெல்லாமோ செய்து பார்த்து விட்டோம். சோஷலிசம்; பொருளாதாரத்தை மேம்படுத்த அரசையே ஈடுபடுத்தினோம்; மக்களையே நேரிடையாக பங்கேற்கச் செய்தோம். ஒரு முயற்சிகூட எதிர்பார்த்த முழு வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவிதத்தில் ஆக்கபூர்வமாக பங்களித்தது என்பதை மறுக்க முடியாது என்பதும் உண்மைதானே. மக்கள் ஏன் இன்றும் மதிப்புடைய வாழ்க்கையை நடத்தமுடியாமல் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி விவாதமே நடைபெறவில்லை என்பேன்.
தீராநதி : அனுபவப்படி பெறும் சவாலாக இருப்பது இந்தத் தன்னார்வ தொண்டு அமைப்புகளின் நம்பகத்தன்மை; கிடைக்கப்பெற்ற நிதிஉதவிகளை முறையாகவோ, எதற்காக அளிக்கப்பட்டதோ அதற்காக செலவழிக்காமல் அமைப்புகள் நடத்துவோர்களே சுருட்டிக் கொள்வதுதானே நடக்கிறது?
அஜய்மேத்தா : நீங்கள் சொன்னது சரிதான்; எதற்காக நிதிஉதவி கிடைக்கப்பெற்றதோ அதற்காக செலவழிக்கப்படவில்லை; முறைகேடாக செலவழிக்கிறார்கள் என்பது உண்மைதான்; இவையெல்லாம் எப்படி நடக்க முடிந்தது என்பதைப்பற்றி ஆழமாக ஆராயப்படவில்லை. சமுதாயம் இந்தச் சீர்கேடுகளை பொறுத்துக் கொண்டதும் உண்மைதான். இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பு என்பதும் _ குற்றவாளி யார் என்பதையும் சுட்டுவது மிகவும் கடினமான காரியமாகும். இதற்கு நாமும் அரசும் பொறுப்பு என்பதையும் உணர வேண்டும். சமுதாயமும் அரசும் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாதவர்களாக இருக்கிறோம். இப்படித் தட்டிக் கேட்கமுடியாத நிலைக்குக் காரணம் என்ன? நாம் ஒவ்வொருவருமே_ அநியாயத்தையும், அக்கிராமத்தையும், எதிர்த்துக் குரல் எழுப்பும் கலாசாரத்தை வளர்க்கத் தவறிவிட்டோம். ஏதோ அரசியல் அதிகாரி_அறிஞர்கள்_மேல் மட்டத்தில் இருப்பவர்களின் வேலை என்று இருந்து வருகிறோம். எதிர்ப்பது என்பது சாதாரண மக்களின் கடமையாகும் என்ற பண்பாட்டை உருவாக்கவில்லை. இவை எல்லாம் வல்லுநர்கள் வேலை என்பது என தீர்மானித்துவிட்டு வாய்மூடி கிடக்கிறோம்.
எனவே, நிதி கிடைப்பது என்ற பிரச்னையைவிட இதுதான் மிகப் பெரிய பிரச்சனை என எனக்குப்படுகிறது. இதற்கு எதிரான மாற்றத்தைக் கொண்டு வருவது மிகக்கடினம் என்பதையும் அறிவேன். வெறும் சொல் உபதேசத்தால் கொண்டு வர முடியாது. இது பொதுமக்களின் நன்மைக்காக கொடுக்கப்பட்டது, பொதுமக்களின் பணம் இது என்ற விவாதம் சமுதாயத்தில் நடைபெற வேண்டும். ஆனால் பொது விவாதம் நடைபெறவில்லை.
தீராநதி: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தொண்டு அமைப்பு அல்லது தன்னார்வக்குழு என்பது, வேலை கொடுக்கும் ஒரு நிறுவனம் என்பதுதான். சேவை என அர்த்தப்படாமல் வயிற்றுப் பிழைப்புக்கான ஒரு வழி என்ற மனோபாவம் ஆழமாக வேர்விட்டு விட்டது. இந்த நிலைமையை எப்படிப் போக்குவது அல்லது மாற்றுவது என்பதுதான் பிரச்னை. தமிழ்நாட்டில் வேலையில்லா பிரச்னை மிகப் பெரிய பிரச்னை. படித்த வேலையில்லாதவர்கள் பெருமளவில் பெருகிக் கொண்டு வருகிறார்கள். வேலையில்லாதவர்கள் ஒன்று சேர்கிறார்கள். நாம் ஏன் ஒரு தன்னார்வக் குழு தொடங்கி, பணம் சம்பாதிக்கக் கூடாது என்று செயல்படுத்துகின்றனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எப்படி? இதைப்பற்றி தங்கள் அனுபவம் என்ன?
அஜய்மேத்தா: நீங்கள் சொல்வது சரிதான் என்பேன். தன்னார்வ குழுக்கள், அரசின் நிதியுதவிகளை செலவழிக்கும் ‘விநியோக குழாய்களாக’ கீழிறக்கப்பட்டுள்ளன என்பது முற்றிலும் உண்மையே. இவை பெரும் மோசடிக் கும்பலாக, கமிஷன் சம்பாதிக்கும் நிலையங்களாக மாறித்தான் உள்ளன. எவ்வளவு பணம் தருகிறாய்? உனக்கு இவ்வளவு கொடுக்கப்படும் என்பதுதான் நடைமுறைச் செயலாக ஆகிவிட்டது. பணம் அல்லது நிதி எந்தத் திட்டத்திற்காக_ இந்த திட்டத்தினால் எவர் பயனடையப் போகிறார்கள் என்பதை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை, இதில் அரசியல்வாதிகளும் புகுந்து விட்டார்கள். ஏழைமக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உதவிகளை, புத்திசாலியாக உள்ள மற்றவர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள். இதில் பெரும் துயரம் என்னவென்றால் கபளீகரம் செய்பவர்களும் வறிய நிலையிலேதான் இருக்கிறார்கள். ஆகவே சுயநலவாதிகளிடமிருந்து இந்த தர்மசிந்தனை தோற்காதபடி காப்பாற்றுவது என்பது மிகக் கடினமான காரியம். இதற்கு என்னதான் வழி இருக்கிறது? எனவே எடுத்துக்காட்டாக செயல்படும் தொண்டு அமைப்பை உருவாக்க வேண்டும், அதற்கான கொள்கைகளை, செய்முறைகளை வகுத்து நடத்தப்பட வேண்டும். எனவே படித்த வேலை இல்லா இளைஞன் தொண்டு நிறுவனம் அமைப்பது என்பது தவறு இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால் அவன் சமூக நலத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் செயல்பட வேண்டும் என அவன் உணரும்படி செய்ய வேண்டும். ஆகவே உன் நலத்தை கவனித்துக் கொள்ளும்போது, அதே சமயத்தில், சமுதாயத்தின் நலத்திற்கும் பாடுபட வேண்டும். அப்படித்தான் செய்ய வேண்டுமேயழிய, கண்டனம் செய்வது சரியல்ல என்றுதான் சொல்லுவேன். அதிகாரத்திலிருப்பவர்களுக்கு கண்காணிக்கும் பொறுப்பு உண்டு. எனக்கு ஆழ்ந்த அனுபவம் இல்லையென்றாலும் நான் பரிந்துரைப்பது இதுதான். செம்மையாக, நினைத்துவழிபட நெறியோடு செயல்படும் தொண்டு நிறுவனங்கள்; அனுபவமில்லாத முறைகேடாக நடக்கும் ஏனைய தன்னார்வ குழுக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் ‘நெறி தவறாமல் நடந்தால்; உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை ஏற்படும்’ என்று நிரூபித்துக் காட்ட வேண்டும்.
தீராநதி: தமிழ்நாட்டில் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு கழகம்; தமிழ்நாடு அரிசன நவக் கழகம், பெண்கள் மேம்பாட்டுக் கழகம், இவையெல்லாமே விளிம்புநிலை மக்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, ஏற்படுத்தப்பட்டவை. அரசாங்கம் உண்மையாகவே மேம்பட வேண்டும் என்று நிதிஉதவி தருகிறது. ஆனால் எவர்களுக்கு போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கு சேரவில்லை. போலித் தொண்டு நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அரசு நிறுவனங்களை நடத்தும் அதிகாரிகளின் மேலும் குற்றம் சுமத்த முடியாது. ஒதுக்கப்பட்ட நிதி குறிப்பிட்ட காலத்திற்குள் செலவழிக்க வேண்டும், செலவழிக்கவில்லை என்றால் விளக்கம் தரவேண்டும். ஏன் இந்த வம்பு என்று எல்லாம் எப்படியோ செலவழிக்கதானே வேண்டும் என இப்படி செயல்படுகிறார்கள். இம்மாதிரியான நிலைமை வடஇந்தியாவில் உண்டா?
அஜய்மேத்தா: வடஇந்தியாவிலும் ஏறக்குறைய இதே நிலைமையே. புதுதில்லியில் ‘சுப்பார்ட்’ என்ற ஒரு நிறுவனம் இருக்கிறது. அது தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. என்ன நடந்தது தெரியுமா? ‘சுப்பார்ட்டில்’ பணிபுரிபவர்களும், வெளியாட்களும் ஒன்றாக சேர்ந்து கொண்டு முறைகேடாக நடந்தனர், ஒதுக்கப்பட்ட நிதி எதற்காக, எவருக்காக என்பதை எல்லாம் தள்ளிவிட்டு செலவழித்தனர். என்ன நடக்கிறது என்பதை அடையாளங்காண வேண்டும். இது மிக முக்கியமான பிரச்னை. நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாங்கமானது, ஒதுக்கீடு செய்வதோடு நின்றுவிடாமல், எப்படிச் செயல்முறைப் படுத்தப்படுகிறது, தலைமைதாங்கி நடத்துபவர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவற்றின் அமைப்பு இவற்றைக் கண்காணிக்க வேண்டும்! இந்தக் கண்காணிப்பு கடினமானதுதான். ஆனால் செய்ய வேண்டியதாக இருக்கிறது, இது தொலைதூரப்பார்வை சம்பந்தமானது.
தீராநதி: மாநில அரசின் பொது நிறுவனங்கள் அடித்தட்டு மக்கள் வாழ்வு மேம்பாட்டிற்கான நிறுவனங்கள் செயல்பாடு இருக்கிறதே மிகவும் வருத்தப்படக் கூடியதாகவே இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு முறைகேடாக நிதியுதவியை எடுத்துக்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், கிட்டதட்ட முப்பத்தைந்து தன்னார்வ அமைப்புகளை உண்டாக்கி பணம் பெருவது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டப்படி பார்த்தால் அமைப்பு, நிர்வாகம், ஆவணங்கள் எல்லாமே சரியாகவே இருக்கின்றன. ஒன்றுமே சட்டப்படி நடவடிக்கை, எடுக்க முடியாது. மத்திய, மாநில பொது நிறுவனங்கள், தாம் செயல்படும் இடங்களைச் சுற்றியுள்ள கிராமங்களை தத்து எடுத்துக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம், உதகமண்டலத்திலுள்ள ஃபிலிம் உற்பத்தி கழகம். இவை என்ன செய்கின்றன? இவற்றின் தொழிற்சாலைகளில் சுற்றுச் சூழல் மாசு அடைகின்றன. எனவே சட்டப்படியாக இந்த வகையான நிறுவனங்கள், தாம் ஈட்டும் வருவாயில் அந்தந்த பிரதேச மக்களின் வாழ்வுக்காக ஒரு பகுதியை செலவிடும்படி செய்யலாமே?
அஜய்மேத்தா: நீங்கள் சரியாகவே சொன்னீர்கள். உங்களைப் போன்றவர்கள் பொதுநலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்ல அறிகுறியாகும். மக்கள் பணம் வீணாக_ எதற்குச் செலவு செய்ய வேண்டுமோ அதற்கு அல்லாமல் செலவு செய்யப்படுகிறது; ஒருவிதமான கொள்ளைதான்_ ஐயமே இல்லை. இது அரசியல் நிர்ப்பந்தம். எதுவாக இருந்தாலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் பிரச்னை. இது சரிசெய்வதற்கான போராட்டம் மிக நீண்டகாலம் தேவைப்படும். உங்களைப் போன்றவர்கள் பத்திரிகைகளில் எழுதலாம். அதாவது இம்மாதிரியான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை என்று மட்டுமே எழுதாமல்; இருக்கிற கட்டுப்பாட்டிற்குள் மாற்று செயல்பாடுகளும் உள்ளன என்பதை எடுத்துக்காட்டிச் சொல்லலாம். பொது நிறுவனங்கள் பள்ளிக்கூடங்கள் நடத்துகின்றன. எம்மாதிரியான பள்ளிக்கூடங்கள் எம்மாதிரியான பாடத்திட்டங்கள் என்பனவற்றைப் பற்றி உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும். பொதுத்துறை, தனியார்துறை நிறுவனங்கள் மிக முக்கியமானவற்றை செய்யத் தவறிவிட்டன. அதாவது உண்மையான தொண்டு பணிக்கான அஸ்திவாரத்தை எழுப்பத் தவறிவிட்டன என்று சொல்வேன். அதாவது தற்காலிகத் தீர்வைத்தான் மேற்கொள்கின்றனர். ‘என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. எடுத்துக் கொள்ளுங்கள், ஏதாவது செய்யுங்கள். உடனடியாக தீர்வுகிடைக்கட்டும்’ இந்த தற்காலிக தீர்வு மனோபாவம் நல்லதல்ல. எதிலுமே ஒப்பிட்டு பார்க்கும் போது சிறந்த மாற்று இருக்கிறது என்பதை மக்களைப் பார்க்கும்படிச் செய்ய வேண்டும்.
தீராநதி: உங்களுக்கு அவசியமான தகவல் ஒன்றை கூறுகின்றேன். இங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்று தன்னார்வ குழு சான்றிதழ் படிப்பிற்காக அஞ்சல்வழி கல்வி தொடங்கியுள்ளது. அது என்ன வென்று விசாரித்ததில் பதில் கிடைத்தது’’ வேலை இல்லாத் திண்டாட்டத்தில் மாட்டித் தவிக்கும் இளைஞர்களுக்கு எப்படி தன்னார்வ அமைப்புகளை தொடங்கலாம், எப்படி நிதியுதவி பெறலாம்? என்று சொல்லிக்கொடுக்கிறதாம். இன்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிதியுதவி செய்கிறார்கள். அவர்கள் சம்பாத்தியத்தில் எவ்வளவு விழுக்காடு இந்த நிதியுதவி கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த நிதியுதவியில் இரண்டு விழுக்காடு கூட சமூகப்பணிக்காக செலவுசெய்யப்படவில்லை. இந்த நிலைமாற்ற என்ன செய்ய வேண்டும்?
அஜய்மேத்தா: வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏதோ தான தர்மம் செய்கிறார்கள். மதக்காரியத்திற்குக் கொடுக்கிறார்கள் நல்லது. ஆனால் இவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். நீங்கள் கொடுக்கிறீர்கள். செலவும் செய்யப்பட்டு விடுகிறது. அதைப்பற்றி எல்லாம் தவறு சொல்லவில்லை. இதோ பாருங்கள் இந்த நிறுவனம் ஒன்று நீண்டகாலமாக இருக்கிறது; இதன் நீண்டகால பணியினால் பயன் அடைந்தவர்கள் உள்ளனர்; சமுதாயத்தின் மாற்றங்கள் இவற்றினால் நிகழ்ந்துள்ளன. நீங்கள் செய்யும் தர்மங்கள் தானங்கள் நினைத்த பயன்களை அடைய வேண்டாமா? என்று சொல்ல வேண்டும். இப்படி சொல்ல வேண்டும் என்ற சிந்தனையே இன்னும் எழவில்லை. முயற்சி எடுக்கப்பட வேண்டும். அவர்களை செயல்பட தூண்டிவிட வேண்டும். தொண்டு நிறுவனங்களுமே தம் செயல்பாடுகளைப்பற்றி ‘ஆத்ம சோதனை’ செய்ய வேண்டும். மகாத்மா காந்தி இதனைத்தான் செய்தார். இப்படிச் செய்ய ஐந்தோ பத்தோ ஆண்டுகள் ஆகலாம். எனவே பொது நலத்தில் அக்கறையுள்ளவர்கள் செய்ய வேண்டிய காரியம். நம் நாடு சனநாயக நாடு என்பதினால் மாற்று வழிகள் உள்ளன என்பதைச் சொல்ல முடியும். மக்களிடம் அறிவுவளர்ச்சியை எழுப்பமுடியும்தான் என்பது என் அனுபவம்.
தீராநதி: ‘கொடுப்பவர்’ தான தருமம் செய்ய எண்ணாமல் சமூக மாற்றத்தைத் தூண்டிவிட எண்ண வேண்டும் இல்லையா? சமூக வளர்ச்சிக்கான முதலீடு செய்பவர் என்று தன்னை எண்ணிக்கொள்ள வேண்டாமா?
அஜய்மேத்தா: உங்கள் கருத்தை முழுவதுமாக ஒப்புக் கொள்கிறேன். சமூக மாற்றத்தை ஏதோ தொழில்நுட்ப சம்பந்தமான தீர்வு என எண்ணிவருகிறார்கள். இந்தச் சிந்தனை பல பிரச்னையை உண்டாக்குகிறது. இவர்களுடன் உங்களைப் போன்றவர்கள் பேச வேண்டும். நாம் எல்லோரும் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏதோ ஒரு சில புத்திசாலிப் பேர்களால் பிரச்னைக்கு தீர்வுகாணமுடியும் என்பது இயலாது. சமூக மாற்றம் என்பது நிர்வாகத்திறமையைச் சார்ந்தது அல்ல. சாதாரண மக்களும் பங்களிக்கும் திறமையுள்ளவர்கள் என்பதைக் காட்ட வேண்டும் தேவைப்படுவது உரையாடல். என்னிடம் பணம் இருக்கிறது; உன்னிடம் இல்லை என்ற பேச்சு தீர்வு காணாது. சரி என்னிடம் பணம் இருக்கிறது; நிர்வாகத்திறமை இருக்கிறது. உன்னிடம் என்ன இருக்கிறது’ ‘என்னிடம் அனுபவ சக்தி இருக்கிறது.’ ஆக இவையெல்லாம் ஒன்று திரட்டப்பட வேண்டும் ஆக நம் சமூகத்திற்குப் பொதுவான தொலைநோக்கினை. உருவாக்க வேண்டும். ‘நான் ‘சேவாமந்திர் என்ற தொண்டுநிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்தேன். நான் அதைவிட்ட பின்பு, அது மேலும் மேன்மையடைந்தது. (சிரிப்பு) உங்களை அங்கு வரவழைக்க விரும்புகிறேன். அந்தக் கிராமங்களில் மாற்றங்கள் கொண்டு வந்ததும் சுற்றுச் சூழலை பாதுகாப்பது, பள்ளிக்கூடங்களை நடத்துவது இப்படி. ஆனால் இவை நிகழ ஆண்டுகள் பலவாயின. சாதி உணர்ச்சி மறைய எடுத்துக்கொண்ட முயற்கிள் எல்லாமே நிறைவாக_ செம்மையாக ஆகிவிட்டன எனச் சொல்லமாட்டேன்.
தீராநதி: பொதுமக்கள் பணத்தைச் செலவழிக்கும் தன்னார்ந்த அமைப்புகள் முறைகேடாக நடந்து கொள்ளும் போது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? அதாவது அவை மேல் பொதுநல வழக்குகள் தொடர முடியுமா? ஏனென்றால் அவை பதிவு செய்யப்பட்டவை என்பதால்?
அஜய்மேத்தா: ஏன் எடுக்க முடியாது? அவை அரசாங்கத்திடமிருந்து நிதி பெறுமானால், நிச்சயம் அரசாங்கமே நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு என்பது நீண்டகால வேலை என்பது இல்லையா? சான்றுகள் திரட்ட வேண்டும், வழக்குத் தொடர்பவருக்கு உறுதியாக இல்லாதபடிக்கு நிலைமை உருவாக்கப்படலாம். நீதிமன்றத்திற்குப் போவதைவிட வேறு பொது மன்றம் வாயிலாக முறைகேடாக செயல்படும் தன்னார்வ அமைப்புகளைப் பற்றி எடுத்துச் சொல்லலாம் இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட சீரழிவு அல்ல; அறிவு சம்பந்தமான சீரழிவும் ஆகும். எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறேன். சென்ற நூற்றாண்டின் எண்பதுகளில், எங்கள் மாநிலத்தில் சொல்லப்பட்டது என்னவென்றால், இந்தப் பழங்குடிமக்கள் தாங்கள் வாழும் வனங்களை முறையாக பராமரிக்கத் தெரியாதவர்கள். ஆக, அவற்றை பராமரிக்க தொண்டு நிறுவனங்கள் தேவைப்படுகிறது’ என்று சொல்லப்பட்டது அரசும் அப்படியே செய்தது. ‘‘இப்போது இருபதாண்டுகள் கழித்து அப்படி செய்வது முட்டாள்தனம். ஏனென்றால், வனங்கள் தனியார்களிடம் வசப்பட்டுவிட்டன. அவர்களும் சமூக உணர்வையும் இழந்து விட்டார்கள். ஆக இதை இருபத்தோராம் நூற்றாண்டில் அப்போது பேசியதுபோல பேசினால் அதுதான், அறிவு சம்பந்தமான சீரழிவு ஆகும். மேலும் கருத்தை உருவாக்குபவர்களும் நகரம் சார்ந்தவர்கள், எதார்த்த நிலைமை என்ன என்பதை அறியாதவர்கள் அவர்கள். தம் சுய முன்னேற்றத்திற்காக இவ்வமைப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆக உண்மையான தொண்டு செய்பவர்களுக்கும் விளம்பரத்திற்காக உள்ளவர்களுக்கும் உள்ள வேற்றுமையை மக்களுக்குப் புலப்படுத்த புதிய சிந்தனைகளை உருவாவதற்கு வெளியை ஏற்படுத்த வேண்டும். நான் பணிபுரிந்த தொண்டு நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை நான் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனச் சொன்னேன். இதனால் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படும், கொடுப்பவர்கள் நிதி அனுப்புவதை நிறுத்தி விடுவார்கள் என்றார்கள். ஆனால் நானோ அவர்களுக்கு முறைகேடு நடந்து விட்டது; அதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளோம் என இரண்டுமே தெரியப்படுத்த வேண்டுமென சொன்னேன். இது அறம்சார்ந்த கடமையெனவும் வற்புறுத்தி, சம்மதிக்கவும் வைத்தேன்.
சந்திப்பு: கி.அ.சச்சிதானந்தன்-கடற்கரய்
இவர் 1990_1999 வரை உதய்ப்பூரில் உள்ள ‘சேவா மந்திர்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தியவர். இந்தத் தொண்டு நிறுவனம் நாட்டுப்புற ஏழைமக்களுக்கு அனைத்து துறையிலும் மேம்பட உதவி செய்து வருகிறது. இன்று அது உலகளாவிய கவனத்தைப் பெற்று இருக்கிறது.
இப்படி தொண்டு செய்வதில் ஏற்படும் ஊழல் குறித்த விஷயங்களை ஆராய்ந்து பேசி ஒரு விழிப்புணர்வை உண்டாக்க முயல்பவர் இவர் சமீபத்தில் சென்னையிலுள்ள தேசிய நாட்டுப்புற உதவி மையத்தில் ஒரு உரை நிகழ்த்த வந்திருந்தார். அவரை சந்தித்து பேசினோம்.
தீராநதி: பெரும்பாலனவர்கள் தர்மம் செய்கிறோம் என்ற மனோபாவத்தை ஒட்டியே தான தர்மங்களை செய்கிறார்கள். சிலர் இது நம்முடைய தார்மீக அறக்கடமை என்ற நோக்கிலும் செய்கிறார்கள் எதிர்காலத்தில் அரசியல், பொருளாதார ஆதாயம் பெறுவதற்காக, அறக்கொடைகள் என்ற போர்வையில் கொடுக்கிறார்கள். உங்கள் பார்வையில் இவையெல்லாம் எப்படிபடுகிறது? நீங்கள் எப்படி இந்த நிதியுதவிகளை பார்க்கிறீர்கள். உங்களுக்கு தொண்டு நிறுவனங்களுடன் நீண்டகாலம் அனுபவம் இருக்கிறது. உங்கள் அனுபவம், சிந்தனையை … பகிர்ந்து கொள்ள முடியுமா?
அஜய்மேத்தா : இந்தியாவில் தர்ம காரியங்கள் செயல்படுவதற்கான தூண்டுகோல்கள்; நோக்கங்கள் பலவாகும், இதுதான் என்று பிரித்துக் காட்ட முடியாது. நீங்கள் சொன்னவைக்குள் அனைத்துமே இருக்கின்றன. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, காந்தி தன் ஆளுமையினால் பல செல்வந்தர்களை தர்மகாரியங்களில் ஈடுபட வைத்தார்; அவர்களின் மனசாட்சியை எழுப்ப அது வல்லதாய் இருந்தது. மகாத்மா காந்தியின் நடத்தை அவர்கள் தர்மம் செய்வதாக எண்ணாமல் தம் சமூகக் கடமை இது என உணரும்படிச் செய்தார் அவர் வகுத்தளித்த ‘தர்மகர்த்தா கோட்பாடு’ ஒரு தீர்க்கதரிசியின் தொலைநோக்குப் பார்வையாகும். அது மரபாக வளராமல் போய்விட்டது வருத்தப்பட வேண்டியதாகும். அந்தக் காலத்திய பெரும் பணக்கார வணிகர்களின் அறவுணர்வுகளை எழுப்பி செயல்படச் செய்தது மகாத்மாவின் மேதையாகும். இப்போதுள்ள பெரும் சவால் என்னவெனில், உதவும் எண்ணமுள்ளவர்களிடம் நம்பும்படியாக தன்னார்வ அமைப்புகள் தம் செயல்பாட்டினாலும் நடத்தையினாலும் இயங்கவேண்டும். நான், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது வருத்தப்படுவது என்னவெனில், கொடையாளர்கள் சமுதாயத்தில் நிலவும் சிக்கலைக் காண மறுக்கிறார்கள். ஏதோ தாங்கள் தர்மம் செய்கிறோம் என எண்ணிவிடுகிறா£கள். கல்வி நிறுவனங்களுக்கு உதவு வது; அடித்தட்டு மக்களுக்கு ஏதோ செய்வது என்பதோடு நின்றுவிடுகிறார்கள். ஆத்மார்த்தமாக புரிந்து கொள்ளவும் இல்லை என்பதுதான் என் வருத்தமாகும். ஏழை மக்களுக்கு கல்வி கொடுக்கும் நிறுவனங்கள் நீண்டகாலம் நிலைத்து இருக்க வேண்டும், என்ன மாற்றங்களை ஏற்படுத்த போகிறோம் என்பதை பத்தியெல்லாம் சிந்திப்பதேயில்லை. வளர்ந்துவரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும், பெருகிவரும் செலவும் எப்படி ஏழைமக்களுக்கும் போகிறது என்பதில் எந்த உணர்வும் இல்லை, ஏதோ தர்மம் செய்துவிட்டதாகவே எண்ணிவிடுகின்றனர். இந்தப்போக்கு சரியானது அல்ல என்றுதான் சொல்வேன். தரமான கல்வியை கொடுக்க வேண்டும்; சிறப்பான பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நினைப்பும் இல்லை; பண உதவியோடு நிறுத்தி விடுகின்றனர். எந்தச் சூழலில் மக்கள் சமுதாயம் இருக்கிறது என்பதை எல்லாம் புரிந்து கொள்ளுவதில்லை.
தீராநதி: உங்கள் அனுபவத்தின்படி, இந்தியாவில் அறக்கொடை வழங்கக்கூடியவர்களுக்குப் பெரும் சவாலாக முன் நிற்பது என்ன? அறக்கொடை செய்ய விரும்புகிறார்கள்; முன் வருகிறார்கள்; ஆனால் செய்வதற்கு இடையூறாக அல்லது இடர்ப்பாடாக இருப்பது என்ன என்பதை விளங்கச் சொல்லுங்கள்?
அஜய்மேத்தா : நாம் சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. நம் மக்கள் முன்னேறுவதற்காக என்னவெல்லாமோ செய்து பார்த்து விட்டோம். சோஷலிசம்; பொருளாதாரத்தை மேம்படுத்த அரசையே ஈடுபடுத்தினோம்; மக்களையே நேரிடையாக பங்கேற்கச் செய்தோம். ஒரு முயற்சிகூட எதிர்பார்த்த முழு வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவிதத்தில் ஆக்கபூர்வமாக பங்களித்தது என்பதை மறுக்க முடியாது என்பதும் உண்மைதானே. மக்கள் ஏன் இன்றும் மதிப்புடைய வாழ்க்கையை நடத்தமுடியாமல் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி விவாதமே நடைபெறவில்லை என்பேன்.
தீராநதி : அனுபவப்படி பெறும் சவாலாக இருப்பது இந்தத் தன்னார்வ தொண்டு அமைப்புகளின் நம்பகத்தன்மை; கிடைக்கப்பெற்ற நிதிஉதவிகளை முறையாகவோ, எதற்காக அளிக்கப்பட்டதோ அதற்காக செலவழிக்காமல் அமைப்புகள் நடத்துவோர்களே சுருட்டிக் கொள்வதுதானே நடக்கிறது?
அஜய்மேத்தா : நீங்கள் சொன்னது சரிதான்; எதற்காக நிதிஉதவி கிடைக்கப்பெற்றதோ அதற்காக செலவழிக்கப்படவில்லை; முறைகேடாக செலவழிக்கிறார்கள் என்பது உண்மைதான்; இவையெல்லாம் எப்படி நடக்க முடிந்தது என்பதைப்பற்றி ஆழமாக ஆராயப்படவில்லை. சமுதாயம் இந்தச் சீர்கேடுகளை பொறுத்துக் கொண்டதும் உண்மைதான். இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பு என்பதும் _ குற்றவாளி யார் என்பதையும் சுட்டுவது மிகவும் கடினமான காரியமாகும். இதற்கு நாமும் அரசும் பொறுப்பு என்பதையும் உணர வேண்டும். சமுதாயமும் அரசும் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாதவர்களாக இருக்கிறோம். இப்படித் தட்டிக் கேட்கமுடியாத நிலைக்குக் காரணம் என்ன? நாம் ஒவ்வொருவருமே_ அநியாயத்தையும், அக்கிராமத்தையும், எதிர்த்துக் குரல் எழுப்பும் கலாசாரத்தை வளர்க்கத் தவறிவிட்டோம். ஏதோ அரசியல் அதிகாரி_அறிஞர்கள்_மேல் மட்டத்தில் இருப்பவர்களின் வேலை என்று இருந்து வருகிறோம். எதிர்ப்பது என்பது சாதாரண மக்களின் கடமையாகும் என்ற பண்பாட்டை உருவாக்கவில்லை. இவை எல்லாம் வல்லுநர்கள் வேலை என்பது என தீர்மானித்துவிட்டு வாய்மூடி கிடக்கிறோம்.
எனவே, நிதி கிடைப்பது என்ற பிரச்னையைவிட இதுதான் மிகப் பெரிய பிரச்சனை என எனக்குப்படுகிறது. இதற்கு எதிரான மாற்றத்தைக் கொண்டு வருவது மிகக்கடினம் என்பதையும் அறிவேன். வெறும் சொல் உபதேசத்தால் கொண்டு வர முடியாது. இது பொதுமக்களின் நன்மைக்காக கொடுக்கப்பட்டது, பொதுமக்களின் பணம் இது என்ற விவாதம் சமுதாயத்தில் நடைபெற வேண்டும். ஆனால் பொது விவாதம் நடைபெறவில்லை.
தீராநதி: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தொண்டு அமைப்பு அல்லது தன்னார்வக்குழு என்பது, வேலை கொடுக்கும் ஒரு நிறுவனம் என்பதுதான். சேவை என அர்த்தப்படாமல் வயிற்றுப் பிழைப்புக்கான ஒரு வழி என்ற மனோபாவம் ஆழமாக வேர்விட்டு விட்டது. இந்த நிலைமையை எப்படிப் போக்குவது அல்லது மாற்றுவது என்பதுதான் பிரச்னை. தமிழ்நாட்டில் வேலையில்லா பிரச்னை மிகப் பெரிய பிரச்னை. படித்த வேலையில்லாதவர்கள் பெருமளவில் பெருகிக் கொண்டு வருகிறார்கள். வேலையில்லாதவர்கள் ஒன்று சேர்கிறார்கள். நாம் ஏன் ஒரு தன்னார்வக் குழு தொடங்கி, பணம் சம்பாதிக்கக் கூடாது என்று செயல்படுத்துகின்றனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எப்படி? இதைப்பற்றி தங்கள் அனுபவம் என்ன?
அஜய்மேத்தா: நீங்கள் சொல்வது சரிதான் என்பேன். தன்னார்வ குழுக்கள், அரசின் நிதியுதவிகளை செலவழிக்கும் ‘விநியோக குழாய்களாக’ கீழிறக்கப்பட்டுள்ளன என்பது முற்றிலும் உண்மையே. இவை பெரும் மோசடிக் கும்பலாக, கமிஷன் சம்பாதிக்கும் நிலையங்களாக மாறித்தான் உள்ளன. எவ்வளவு பணம் தருகிறாய்? உனக்கு இவ்வளவு கொடுக்கப்படும் என்பதுதான் நடைமுறைச் செயலாக ஆகிவிட்டது. பணம் அல்லது நிதி எந்தத் திட்டத்திற்காக_ இந்த திட்டத்தினால் எவர் பயனடையப் போகிறார்கள் என்பதை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை, இதில் அரசியல்வாதிகளும் புகுந்து விட்டார்கள். ஏழைமக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உதவிகளை, புத்திசாலியாக உள்ள மற்றவர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள். இதில் பெரும் துயரம் என்னவென்றால் கபளீகரம் செய்பவர்களும் வறிய நிலையிலேதான் இருக்கிறார்கள். ஆகவே சுயநலவாதிகளிடமிருந்து இந்த தர்மசிந்தனை தோற்காதபடி காப்பாற்றுவது என்பது மிகக் கடினமான காரியம். இதற்கு என்னதான் வழி இருக்கிறது? எனவே எடுத்துக்காட்டாக செயல்படும் தொண்டு அமைப்பை உருவாக்க வேண்டும், அதற்கான கொள்கைகளை, செய்முறைகளை வகுத்து நடத்தப்பட வேண்டும். எனவே படித்த வேலை இல்லா இளைஞன் தொண்டு நிறுவனம் அமைப்பது என்பது தவறு இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால் அவன் சமூக நலத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் செயல்பட வேண்டும் என அவன் உணரும்படி செய்ய வேண்டும். ஆகவே உன் நலத்தை கவனித்துக் கொள்ளும்போது, அதே சமயத்தில், சமுதாயத்தின் நலத்திற்கும் பாடுபட வேண்டும். அப்படித்தான் செய்ய வேண்டுமேயழிய, கண்டனம் செய்வது சரியல்ல என்றுதான் சொல்லுவேன். அதிகாரத்திலிருப்பவர்களுக்கு கண்காணிக்கும் பொறுப்பு உண்டு. எனக்கு ஆழ்ந்த அனுபவம் இல்லையென்றாலும் நான் பரிந்துரைப்பது இதுதான். செம்மையாக, நினைத்துவழிபட நெறியோடு செயல்படும் தொண்டு நிறுவனங்கள்; அனுபவமில்லாத முறைகேடாக நடக்கும் ஏனைய தன்னார்வ குழுக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் ‘நெறி தவறாமல் நடந்தால்; உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை ஏற்படும்’ என்று நிரூபித்துக் காட்ட வேண்டும்.
தீராநதி: தமிழ்நாட்டில் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு கழகம்; தமிழ்நாடு அரிசன நவக் கழகம், பெண்கள் மேம்பாட்டுக் கழகம், இவையெல்லாமே விளிம்புநிலை மக்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, ஏற்படுத்தப்பட்டவை. அரசாங்கம் உண்மையாகவே மேம்பட வேண்டும் என்று நிதிஉதவி தருகிறது. ஆனால் எவர்களுக்கு போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கு சேரவில்லை. போலித் தொண்டு நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அரசு நிறுவனங்களை நடத்தும் அதிகாரிகளின் மேலும் குற்றம் சுமத்த முடியாது. ஒதுக்கப்பட்ட நிதி குறிப்பிட்ட காலத்திற்குள் செலவழிக்க வேண்டும், செலவழிக்கவில்லை என்றால் விளக்கம் தரவேண்டும். ஏன் இந்த வம்பு என்று எல்லாம் எப்படியோ செலவழிக்கதானே வேண்டும் என இப்படி செயல்படுகிறார்கள். இம்மாதிரியான நிலைமை வடஇந்தியாவில் உண்டா?
அஜய்மேத்தா: வடஇந்தியாவிலும் ஏறக்குறைய இதே நிலைமையே. புதுதில்லியில் ‘சுப்பார்ட்’ என்ற ஒரு நிறுவனம் இருக்கிறது. அது தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. என்ன நடந்தது தெரியுமா? ‘சுப்பார்ட்டில்’ பணிபுரிபவர்களும், வெளியாட்களும் ஒன்றாக சேர்ந்து கொண்டு முறைகேடாக நடந்தனர், ஒதுக்கப்பட்ட நிதி எதற்காக, எவருக்காக என்பதை எல்லாம் தள்ளிவிட்டு செலவழித்தனர். என்ன நடக்கிறது என்பதை அடையாளங்காண வேண்டும். இது மிக முக்கியமான பிரச்னை. நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாங்கமானது, ஒதுக்கீடு செய்வதோடு நின்றுவிடாமல், எப்படிச் செயல்முறைப் படுத்தப்படுகிறது, தலைமைதாங்கி நடத்துபவர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவற்றின் அமைப்பு இவற்றைக் கண்காணிக்க வேண்டும்! இந்தக் கண்காணிப்பு கடினமானதுதான். ஆனால் செய்ய வேண்டியதாக இருக்கிறது, இது தொலைதூரப்பார்வை சம்பந்தமானது.
தீராநதி: மாநில அரசின் பொது நிறுவனங்கள் அடித்தட்டு மக்கள் வாழ்வு மேம்பாட்டிற்கான நிறுவனங்கள் செயல்பாடு இருக்கிறதே மிகவும் வருத்தப்படக் கூடியதாகவே இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு முறைகேடாக நிதியுதவியை எடுத்துக்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், கிட்டதட்ட முப்பத்தைந்து தன்னார்வ அமைப்புகளை உண்டாக்கி பணம் பெருவது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டப்படி பார்த்தால் அமைப்பு, நிர்வாகம், ஆவணங்கள் எல்லாமே சரியாகவே இருக்கின்றன. ஒன்றுமே சட்டப்படி நடவடிக்கை, எடுக்க முடியாது. மத்திய, மாநில பொது நிறுவனங்கள், தாம் செயல்படும் இடங்களைச் சுற்றியுள்ள கிராமங்களை தத்து எடுத்துக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம், உதகமண்டலத்திலுள்ள ஃபிலிம் உற்பத்தி கழகம். இவை என்ன செய்கின்றன? இவற்றின் தொழிற்சாலைகளில் சுற்றுச் சூழல் மாசு அடைகின்றன. எனவே சட்டப்படியாக இந்த வகையான நிறுவனங்கள், தாம் ஈட்டும் வருவாயில் அந்தந்த பிரதேச மக்களின் வாழ்வுக்காக ஒரு பகுதியை செலவிடும்படி செய்யலாமே?
அஜய்மேத்தா: நீங்கள் சரியாகவே சொன்னீர்கள். உங்களைப் போன்றவர்கள் பொதுநலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்ல அறிகுறியாகும். மக்கள் பணம் வீணாக_ எதற்குச் செலவு செய்ய வேண்டுமோ அதற்கு அல்லாமல் செலவு செய்யப்படுகிறது; ஒருவிதமான கொள்ளைதான்_ ஐயமே இல்லை. இது அரசியல் நிர்ப்பந்தம். எதுவாக இருந்தாலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் பிரச்னை. இது சரிசெய்வதற்கான போராட்டம் மிக நீண்டகாலம் தேவைப்படும். உங்களைப் போன்றவர்கள் பத்திரிகைகளில் எழுதலாம். அதாவது இம்மாதிரியான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை என்று மட்டுமே எழுதாமல்; இருக்கிற கட்டுப்பாட்டிற்குள் மாற்று செயல்பாடுகளும் உள்ளன என்பதை எடுத்துக்காட்டிச் சொல்லலாம். பொது நிறுவனங்கள் பள்ளிக்கூடங்கள் நடத்துகின்றன. எம்மாதிரியான பள்ளிக்கூடங்கள் எம்மாதிரியான பாடத்திட்டங்கள் என்பனவற்றைப் பற்றி உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும். பொதுத்துறை, தனியார்துறை நிறுவனங்கள் மிக முக்கியமானவற்றை செய்யத் தவறிவிட்டன. அதாவது உண்மையான தொண்டு பணிக்கான அஸ்திவாரத்தை எழுப்பத் தவறிவிட்டன என்று சொல்வேன். அதாவது தற்காலிகத் தீர்வைத்தான் மேற்கொள்கின்றனர். ‘என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. எடுத்துக் கொள்ளுங்கள், ஏதாவது செய்யுங்கள். உடனடியாக தீர்வுகிடைக்கட்டும்’ இந்த தற்காலிக தீர்வு மனோபாவம் நல்லதல்ல. எதிலுமே ஒப்பிட்டு பார்க்கும் போது சிறந்த மாற்று இருக்கிறது என்பதை மக்களைப் பார்க்கும்படிச் செய்ய வேண்டும்.
தீராநதி: உங்களுக்கு அவசியமான தகவல் ஒன்றை கூறுகின்றேன். இங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்று தன்னார்வ குழு சான்றிதழ் படிப்பிற்காக அஞ்சல்வழி கல்வி தொடங்கியுள்ளது. அது என்ன வென்று விசாரித்ததில் பதில் கிடைத்தது’’ வேலை இல்லாத் திண்டாட்டத்தில் மாட்டித் தவிக்கும் இளைஞர்களுக்கு எப்படி தன்னார்வ அமைப்புகளை தொடங்கலாம், எப்படி நிதியுதவி பெறலாம்? என்று சொல்லிக்கொடுக்கிறதாம். இன்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிதியுதவி செய்கிறார்கள். அவர்கள் சம்பாத்தியத்தில் எவ்வளவு விழுக்காடு இந்த நிதியுதவி கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த நிதியுதவியில் இரண்டு விழுக்காடு கூட சமூகப்பணிக்காக செலவுசெய்யப்படவில்லை. இந்த நிலைமாற்ற என்ன செய்ய வேண்டும்?
அஜய்மேத்தா: வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏதோ தான தர்மம் செய்கிறார்கள். மதக்காரியத்திற்குக் கொடுக்கிறார்கள் நல்லது. ஆனால் இவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். நீங்கள் கொடுக்கிறீர்கள். செலவும் செய்யப்பட்டு விடுகிறது. அதைப்பற்றி எல்லாம் தவறு சொல்லவில்லை. இதோ பாருங்கள் இந்த நிறுவனம் ஒன்று நீண்டகாலமாக இருக்கிறது; இதன் நீண்டகால பணியினால் பயன் அடைந்தவர்கள் உள்ளனர்; சமுதாயத்தின் மாற்றங்கள் இவற்றினால் நிகழ்ந்துள்ளன. நீங்கள் செய்யும் தர்மங்கள் தானங்கள் நினைத்த பயன்களை அடைய வேண்டாமா? என்று சொல்ல வேண்டும். இப்படி சொல்ல வேண்டும் என்ற சிந்தனையே இன்னும் எழவில்லை. முயற்சி எடுக்கப்பட வேண்டும். அவர்களை செயல்பட தூண்டிவிட வேண்டும். தொண்டு நிறுவனங்களுமே தம் செயல்பாடுகளைப்பற்றி ‘ஆத்ம சோதனை’ செய்ய வேண்டும். மகாத்மா காந்தி இதனைத்தான் செய்தார். இப்படிச் செய்ய ஐந்தோ பத்தோ ஆண்டுகள் ஆகலாம். எனவே பொது நலத்தில் அக்கறையுள்ளவர்கள் செய்ய வேண்டிய காரியம். நம் நாடு சனநாயக நாடு என்பதினால் மாற்று வழிகள் உள்ளன என்பதைச் சொல்ல முடியும். மக்களிடம் அறிவுவளர்ச்சியை எழுப்பமுடியும்தான் என்பது என் அனுபவம்.
தீராநதி: ‘கொடுப்பவர்’ தான தருமம் செய்ய எண்ணாமல் சமூக மாற்றத்தைத் தூண்டிவிட எண்ண வேண்டும் இல்லையா? சமூக வளர்ச்சிக்கான முதலீடு செய்பவர் என்று தன்னை எண்ணிக்கொள்ள வேண்டாமா?
அஜய்மேத்தா: உங்கள் கருத்தை முழுவதுமாக ஒப்புக் கொள்கிறேன். சமூக மாற்றத்தை ஏதோ தொழில்நுட்ப சம்பந்தமான தீர்வு என எண்ணிவருகிறார்கள். இந்தச் சிந்தனை பல பிரச்னையை உண்டாக்குகிறது. இவர்களுடன் உங்களைப் போன்றவர்கள் பேச வேண்டும். நாம் எல்லோரும் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏதோ ஒரு சில புத்திசாலிப் பேர்களால் பிரச்னைக்கு தீர்வுகாணமுடியும் என்பது இயலாது. சமூக மாற்றம் என்பது நிர்வாகத்திறமையைச் சார்ந்தது அல்ல. சாதாரண மக்களும் பங்களிக்கும் திறமையுள்ளவர்கள் என்பதைக் காட்ட வேண்டும் தேவைப்படுவது உரையாடல். என்னிடம் பணம் இருக்கிறது; உன்னிடம் இல்லை என்ற பேச்சு தீர்வு காணாது. சரி என்னிடம் பணம் இருக்கிறது; நிர்வாகத்திறமை இருக்கிறது. உன்னிடம் என்ன இருக்கிறது’ ‘என்னிடம் அனுபவ சக்தி இருக்கிறது.’ ஆக இவையெல்லாம் ஒன்று திரட்டப்பட வேண்டும் ஆக நம் சமூகத்திற்குப் பொதுவான தொலைநோக்கினை. உருவாக்க வேண்டும். ‘நான் ‘சேவாமந்திர் என்ற தொண்டுநிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்தேன். நான் அதைவிட்ட பின்பு, அது மேலும் மேன்மையடைந்தது. (சிரிப்பு) உங்களை அங்கு வரவழைக்க விரும்புகிறேன். அந்தக் கிராமங்களில் மாற்றங்கள் கொண்டு வந்ததும் சுற்றுச் சூழலை பாதுகாப்பது, பள்ளிக்கூடங்களை நடத்துவது இப்படி. ஆனால் இவை நிகழ ஆண்டுகள் பலவாயின. சாதி உணர்ச்சி மறைய எடுத்துக்கொண்ட முயற்கிள் எல்லாமே நிறைவாக_ செம்மையாக ஆகிவிட்டன எனச் சொல்லமாட்டேன்.
தீராநதி: பொதுமக்கள் பணத்தைச் செலவழிக்கும் தன்னார்ந்த அமைப்புகள் முறைகேடாக நடந்து கொள்ளும் போது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? அதாவது அவை மேல் பொதுநல வழக்குகள் தொடர முடியுமா? ஏனென்றால் அவை பதிவு செய்யப்பட்டவை என்பதால்?
அஜய்மேத்தா: ஏன் எடுக்க முடியாது? அவை அரசாங்கத்திடமிருந்து நிதி பெறுமானால், நிச்சயம் அரசாங்கமே நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு என்பது நீண்டகால வேலை என்பது இல்லையா? சான்றுகள் திரட்ட வேண்டும், வழக்குத் தொடர்பவருக்கு உறுதியாக இல்லாதபடிக்கு நிலைமை உருவாக்கப்படலாம். நீதிமன்றத்திற்குப் போவதைவிட வேறு பொது மன்றம் வாயிலாக முறைகேடாக செயல்படும் தன்னார்வ அமைப்புகளைப் பற்றி எடுத்துச் சொல்லலாம் இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட சீரழிவு அல்ல; அறிவு சம்பந்தமான சீரழிவும் ஆகும். எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறேன். சென்ற நூற்றாண்டின் எண்பதுகளில், எங்கள் மாநிலத்தில் சொல்லப்பட்டது என்னவென்றால், இந்தப் பழங்குடிமக்கள் தாங்கள் வாழும் வனங்களை முறையாக பராமரிக்கத் தெரியாதவர்கள். ஆக, அவற்றை பராமரிக்க தொண்டு நிறுவனங்கள் தேவைப்படுகிறது’ என்று சொல்லப்பட்டது அரசும் அப்படியே செய்தது. ‘‘இப்போது இருபதாண்டுகள் கழித்து அப்படி செய்வது முட்டாள்தனம். ஏனென்றால், வனங்கள் தனியார்களிடம் வசப்பட்டுவிட்டன. அவர்களும் சமூக உணர்வையும் இழந்து விட்டார்கள். ஆக இதை இருபத்தோராம் நூற்றாண்டில் அப்போது பேசியதுபோல பேசினால் அதுதான், அறிவு சம்பந்தமான சீரழிவு ஆகும். மேலும் கருத்தை உருவாக்குபவர்களும் நகரம் சார்ந்தவர்கள், எதார்த்த நிலைமை என்ன என்பதை அறியாதவர்கள் அவர்கள். தம் சுய முன்னேற்றத்திற்காக இவ்வமைப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆக உண்மையான தொண்டு செய்பவர்களுக்கும் விளம்பரத்திற்காக உள்ளவர்களுக்கும் உள்ள வேற்றுமையை மக்களுக்குப் புலப்படுத்த புதிய சிந்தனைகளை உருவாவதற்கு வெளியை ஏற்படுத்த வேண்டும். நான் பணிபுரிந்த தொண்டு நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை நான் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனச் சொன்னேன். இதனால் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படும், கொடுப்பவர்கள் நிதி அனுப்புவதை நிறுத்தி விடுவார்கள் என்றார்கள். ஆனால் நானோ அவர்களுக்கு முறைகேடு நடந்து விட்டது; அதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளோம் என இரண்டுமே தெரியப்படுத்த வேண்டுமென சொன்னேன். இது அறம்சார்ந்த கடமையெனவும் வற்புறுத்தி, சம்மதிக்கவும் வைத்தேன்.
சந்திப்பு: கி.அ.சச்சிதானந்தன்-கடற்கரய்
Tuesday, December 1, 2009
நானும் தாதாதான்..நானும் தாதாதான்
நானும் நண்பர் முகேசபாண்டியனுடன் மூன்று நாள் ஒன்றாக தங்கும் சந்தர்ப்பம் சமீபத்தில் வாய்த்தது.சென்னை வரும் நாட்களில் அவர் விரும்பிப் பார்க்கும் நண்பர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.வயது வித்தியாசமற்று அவருடன் உரையாடல் நடத்துவது எல்லோராலும் முடிக்கின்ற ஒரு காரியம்.அந்த அளவுக்கு இருக்கமற்ற ஒரு உறவை அவர் பேணி வருகிறார். பல வருடமாக அவருடம் பழகும் நண்பர்களின் நிறைகுறைகளை கூட நேரடியாக தயவு தாட்சண்யமின்றி சொல்லிவிட்டவும், பின்பும் எந்த விரிசலும் இல்லாமல்நட்பை கொண்டு செல்லவும் அவரால் முடிகிறது.அவரின் அளவீடுகளை எடுத்து நாம் இந்த விஷயத்திற்கு கையாள நினைத்தால் வருட இறுதியில் நம் நட்பு பட்டியலில் உள்ள பாதி பெயர்களை நாம் டெலிட் செய்தே ஆகவேண்டியிருக்கும். அந்த கூரிய முனையில் நடக்கத் தெரிந்தவர் ந.மு. அந்த இலாவகம் புரிந்தவர்.மொத்தத்தில் நாசுக்கு அறிந்தவர்.மூன்றுநாள் தங்களின் போது
அறையில் நடந்த இன்பகரமான பேச்சு இடையில் “அப்பாஸ் ஒரு மகாகவி என்று உங்களின் ப்ளாக்கில் எழுதியிருந்தீர்களா?”என்று கேட்டார்.”அப்படி எதுவும் எழுதவில்லை.இந்த மகாகவி..கொக்கரகவி என்பதில் எல்லாம் பொருள்நிறைவு கொள்ளாதவன் நான்.ஆளுமை
என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.”என்றேன்.மேலும் அவரிடன் ”எதற்காக இதை கேட்குறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”என்றேன்.
“இல்லை.மார்த்தாண்டன் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த லஷ்மி மணிவண்ணன் உங்களுக்கு அப்பாஸை யார் என்றே தெரியவில்லை.
ஆனால் அப்பாஸ் இறந்தவுடன் உங்களின் ப்ளாக்கில் அவரை பற்றி எழுதிவிட்டு ஒரு நண்பருக்கு தொலைபேசி செய்து அப்பாஸின் கவிதை புத்தகம் ஏதாவது கிடைக்குமா?என்று கேட்டிருக்கிறீகள்.இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்ல”என்றதொனியில் எல்லோரிடமும் அவர் பொறுமிக்கொண்டிருந்தார் அதனால் தான் இதைகேட்டேன்” என்றார்.
பொதுவாக தமிழ்ச்சூழலில் ஒரு பொதுபுத்தி நிலவுகிறது.தன்னை தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எதையுமே படிக்காத மூடர்கள் என்று பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் போய் நான் படிக்கிறேன் என்று சான்றிதழ் பெறவேண்டும்.குருகுலம் பயிலவேண்டுன்.இல்லை என்றால்
நாட்டாமை தீர்ப்பு சவுக்கடியாக நம் முதுகை கிழிக்கும்.நான் குறிப்பிட்ட அந்தப்புத்தி மனநிலைக்கு சரியான சான்று:லஷ்மிமணிவண்ணன்.
அவரைபோல ஒரு நோயாலியின் நிலமை குறித்து வருத்தப்படுவதை தவிர என்னால் வேறெதுவும் செய்யமுடியாது.”அதைவிடுங்கள் பாண்டியன்..இதையெல்லாம் என்கிட்ட போய் கேட்டுகிட்டு”என்று அந்தப்பந்தை அப்படியே தள்ளிவிட்டேன். அதே கேள்வியை
மறுபடியும் ஒருமுறை கண்ணன் என்னிடம் கேட்டார். ”அப்பாஸின் கவிதைகளை பற்றி மணிவண்ணனிடம் உரையாடல் நடத்துவதே அநாகரியம் என்று கருதுபவன் நான்.அதை தவிர்த்து வேறுபேசுவோம்”என்றேன். அதற்கு கண்ணன் ”விவரம் புரியாமல் பேசுகிறான் என்று நானும் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.சும்மா பேச்சுக்காக உங்களிடம் கேட்டேன்”என்றார்.
இங்கு படிப்பாளி என்றால் ஒரு வகையறா.சிந்தனைவாதி என்றால் இன்னொரு வகையறா. இப்படிதான் சூழல் இருக்கிறது.
உன்மையான அறிவுஜீவிகள் ஆள் அடையாளமற்று ஒதுங்கிக் கிடக்கிறார்கள்.இந்த ஒன்றுமில்லாத வகையறாக்களின் கொசுதொல்லையைதான் நம்மால் தாங்கவே முடியவில்லை.ஒருவனை நேரடியாக நிராகரிக்க திரனற்றவர்கள் கூட கலாச்சாரக் மட்டத்தில் வேலை செய்யும்நிலமை தமிழ்நாட்டிற்கே உரியது. ஆங்கிலத்திலிருந்து ஒரு சிலக்கதைகளை மொழிபெயர்த்துவிட்டு எழுதிய எழுத்தாளைனைவிட ஒரு பங்கு மேலே போய் ஜம்பம் அடிக்க தெரிந்தவர்களே இங்கே இலக்கியவாதிகள்.
“நானும் தாதாதான்..நானும் தாதாதான்..”என வடிவேலு ரேஞ்சுக்கு கதறும் இவர்களை வடிவேலு பாணியிலேயே சிரிப்பு போலீஸ் என்று ஒதுக்கிவிடுவதே நமக்கு உசிதம்
அறையில் நடந்த இன்பகரமான பேச்சு இடையில் “அப்பாஸ் ஒரு மகாகவி என்று உங்களின் ப்ளாக்கில் எழுதியிருந்தீர்களா?”என்று கேட்டார்.”அப்படி எதுவும் எழுதவில்லை.இந்த மகாகவி..கொக்கரகவி என்பதில் எல்லாம் பொருள்நிறைவு கொள்ளாதவன் நான்.ஆளுமை
என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.”என்றேன்.மேலும் அவரிடன் ”எதற்காக இதை கேட்குறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”என்றேன்.
“இல்லை.மார்த்தாண்டன் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த லஷ்மி மணிவண்ணன் உங்களுக்கு அப்பாஸை யார் என்றே தெரியவில்லை.
ஆனால் அப்பாஸ் இறந்தவுடன் உங்களின் ப்ளாக்கில் அவரை பற்றி எழுதிவிட்டு ஒரு நண்பருக்கு தொலைபேசி செய்து அப்பாஸின் கவிதை புத்தகம் ஏதாவது கிடைக்குமா?என்று கேட்டிருக்கிறீகள்.இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்ல”என்றதொனியில் எல்லோரிடமும் அவர் பொறுமிக்கொண்டிருந்தார் அதனால் தான் இதைகேட்டேன்” என்றார்.
பொதுவாக தமிழ்ச்சூழலில் ஒரு பொதுபுத்தி நிலவுகிறது.தன்னை தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எதையுமே படிக்காத மூடர்கள் என்று பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் போய் நான் படிக்கிறேன் என்று சான்றிதழ் பெறவேண்டும்.குருகுலம் பயிலவேண்டுன்.இல்லை என்றால்
நாட்டாமை தீர்ப்பு சவுக்கடியாக நம் முதுகை கிழிக்கும்.நான் குறிப்பிட்ட அந்தப்புத்தி மனநிலைக்கு சரியான சான்று:லஷ்மிமணிவண்ணன்.
அவரைபோல ஒரு நோயாலியின் நிலமை குறித்து வருத்தப்படுவதை தவிர என்னால் வேறெதுவும் செய்யமுடியாது.”அதைவிடுங்கள் பாண்டியன்..இதையெல்லாம் என்கிட்ட போய் கேட்டுகிட்டு”என்று அந்தப்பந்தை அப்படியே தள்ளிவிட்டேன். அதே கேள்வியை
மறுபடியும் ஒருமுறை கண்ணன் என்னிடம் கேட்டார். ”அப்பாஸின் கவிதைகளை பற்றி மணிவண்ணனிடம் உரையாடல் நடத்துவதே அநாகரியம் என்று கருதுபவன் நான்.அதை தவிர்த்து வேறுபேசுவோம்”என்றேன். அதற்கு கண்ணன் ”விவரம் புரியாமல் பேசுகிறான் என்று நானும் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.சும்மா பேச்சுக்காக உங்களிடம் கேட்டேன்”என்றார்.
இங்கு படிப்பாளி என்றால் ஒரு வகையறா.சிந்தனைவாதி என்றால் இன்னொரு வகையறா. இப்படிதான் சூழல் இருக்கிறது.
உன்மையான அறிவுஜீவிகள் ஆள் அடையாளமற்று ஒதுங்கிக் கிடக்கிறார்கள்.இந்த ஒன்றுமில்லாத வகையறாக்களின் கொசுதொல்லையைதான் நம்மால் தாங்கவே முடியவில்லை.ஒருவனை நேரடியாக நிராகரிக்க திரனற்றவர்கள் கூட கலாச்சாரக் மட்டத்தில் வேலை செய்யும்நிலமை தமிழ்நாட்டிற்கே உரியது. ஆங்கிலத்திலிருந்து ஒரு சிலக்கதைகளை மொழிபெயர்த்துவிட்டு எழுதிய எழுத்தாளைனைவிட ஒரு பங்கு மேலே போய் ஜம்பம் அடிக்க தெரிந்தவர்களே இங்கே இலக்கியவாதிகள்.
“நானும் தாதாதான்..நானும் தாதாதான்..”என வடிவேலு ரேஞ்சுக்கு கதறும் இவர்களை வடிவேலு பாணியிலேயே சிரிப்பு போலீஸ் என்று ஒதுக்கிவிடுவதே நமக்கு உசிதம்
Subscribe to:
Comments (Atom)