Thursday, November 25, 2010

ஒரு சரித்திரப் பயணம்



என் அன்பு நண்பர் அ.முத்துகிருஷ்ணன் ஒரு சரித்திரபூர்வமான பயணத்தை மேற்கொள்கிறார்.மனித உரிமை பிரச்னை,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,மக்களின் அடிப்படை சுதந்திர உரிமைகள் என தொடர்ந்து இயங்கிவருபவர்.அவரின் இந்தப் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்
அன்புடன்
கே



பாலஸ்தீன மக்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக அனுபவித்து வரும் துயரவாழ்வு இன்று உலக மக்கள் நன்கு அறிந்த ஒரு விஷயமே. நம் அவசரமான வாழ்வில் அவர்களின் கதையை செவி மடுத்து கேட்க அவகாசம் இல்லாத அளவுக்கு உலகம் அதிவேகமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. தினந்தோறும் அங்கு பெரும் குண்டு வெடிப்புகளின் ஓசையுடன் தான் அவர்களின் காலை பொழுது விடிகிறது. கடந்த அறுபது ஆண்டுகளில் தங்களின் சொந்த நிலத்திலேயே அகதிகளாக அலைகழிக்கப்படுவது மட்டுமின்றி மெல்ல மெல்ல தங்களின் நிலத்தையும் பறிகொடுத்து சிறு கீற்றான நிலப்பகுதிகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு காலனிகளாக குடியேறி மெல்ல மெல்ல பாலஸ்தீன மக்களின் நிலத்தை அபகரித்து இஸ்ரேல் உலக வரைபடத்தில் தன் இருப்பை ஏற்படுத்தி பின்னர் நிலைப்படுத்திக் கொண்டது. 1950கள் முதல் 2010 வரையிலான உலக வரைபடங்களை சேகரித்து அதனை ஒப்பிட்டு பார்த்தால் இந்த உண்மை யாவருக்கும் விளங்கும்.
15 லட்சம் மக்கள் வாழும் காசா பகுதி இருப்பதிலேயே மிகவும் துயர மேகங்கள் சூழ்ந்த பகுதி. இந்த காசா மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பாலஸ்தீனத்தின் நிலையை உலகிற்கு எடுத்துரைக்கவும் ஒரு பயணத்தை மேற்கொள்வது என ஆசியாவில் உள்ள முற்போக்காளர்கள் சிலர் தீர்மானித்த அது இப்பொழுது செயல் வடிவம் பெற்றுள்ளது. ஆசியாவின் 18 நாடுகளை சேர்ந்த 500 பேர் பாலஸ்தீனம் நோக்கி ஒரு பெரும் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள். தில்லியில் இருந்து கிளம்பி வாகா எல்லை வாயில் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து, பின்னர் அங்கிருந்து ஈரான், துருக்கி, சிரியா, லெபனன், ஜோர்டன், எகிப்து செல்கிறது பயணக்குழு. இந்த 7 தேசங்களையும் சாலை வழியாக பயணித்து கடப்பதும், வழி நெடுகிலும் பல நகரங்களின் பாலஸ்தீன ஆதரவு கருத்தரங்குகள், திரைப்படவிழாக்கள் என பெரும் ஏற்பாடுகள் எல்லா நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. எகிப்தின் அல்-அரீஷ் துறைமுகத்திலிருந்து கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு காசாவை சென்றடைந்து பயணக் குழு 2011 புத்தாண்டை அந்த மக்களுடன் கொண்டாட இருக்கிறது.
இந்த பயணக்குழுவில் 50 இந்தியர்கள் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் பயணக்குழுவில் செல்லும் ஒரே தமிழர் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் மட்டுமே. சமீபத்தில் அவர் எழுதிய காசா- அறங்கள் மடிந்த இடம் கட்டுரை குறுப்பிடதக்கது. அவர் தமிழ் சுழலில் தொடர்ந்து காத்திரமாக இயங்கி வருபவர், நிறைய கட்டுரைகளை எழுதியும் வருபவர்.
பாலஸ்தீன நிவாரண நிதிக்காக மக்களிடன் அவர் நன்கொடைகளை திரட்டி வருகிறார். இந்த மக்களுக்கு மருந்துகள், கட்டுமான பொருட்கள் என அவர்களின் அன்றாடங்களை சீர்படுத்தும் பல பொருட்களை வாங்குவதற்கு இந்த நிதி செலவிடப்படும்.

நிதி அளிக்க விருப்பம் உள்ளவர்கள்
A.MUTHUKRISHNAN அவர்களை +919443477353 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பணத்தை A.MUTHUKRISHNAN State Bank of India SB A/C no 30322814376 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தலாம். அல்லது A.MUTHUKRISHNAN பெயரில் காசோலை எடுத்து அனுப்பலாம்.