Showing posts with label ஓர் அறிவிப்பு. Show all posts
Showing posts with label ஓர் அறிவிப்பு. Show all posts

Wednesday, April 20, 2011

எஸ்.ராவுக்கு என் அன்பான வாழ்த்துகள்


இந்தியாவின் மிக முக்கிய விருதான தாகூர் இலக்கிய விருது எனக்கு கிடைத்துள்ளது, இந்த விருதை கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து ஏற்படுத்தியுள்ளது.முதன்முறையாக தமிழுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது, அதைப் பெறுவதில் மிகுந்த சந்தோஷமடைகிறேன், இந்த விருது குறித்த அறிவிப்பு.

தாகூர் இலக்கியப்பரிசு

மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது,

91 ஆயிரம் ரொக்கப்பணமும் தாகூர் உருவச்சிலையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது,

இந்தத் தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம், இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்

2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது,

யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல், இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கியவிருது தமிழுக்கு முதன்முறையாக வழங்கப்படுகிறது, அவ்வகையில் எஸ்,ராமகிருஷணன் மிகுந்த பெருமையடைகிறார்.

விருதுவழங்கும் நிகழ்ச்சி மும்பையில் மேமாதம் 5ம் தேதி மாலை மேற்கு தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திர் வளாகத்தில் நடைபெற்ற உள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய இலக்கியவாதிகள் மற்றும் கொரிய அரசின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

அன்புடன்

எஸ்.ராமகிருஷ்ணன்

Thursday, November 25, 2010

ஒரு சரித்திரப் பயணம்



என் அன்பு நண்பர் அ.முத்துகிருஷ்ணன் ஒரு சரித்திரபூர்வமான பயணத்தை மேற்கொள்கிறார்.மனித உரிமை பிரச்னை,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,மக்களின் அடிப்படை சுதந்திர உரிமைகள் என தொடர்ந்து இயங்கிவருபவர்.அவரின் இந்தப் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்
அன்புடன்
கே



பாலஸ்தீன மக்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக அனுபவித்து வரும் துயரவாழ்வு இன்று உலக மக்கள் நன்கு அறிந்த ஒரு விஷயமே. நம் அவசரமான வாழ்வில் அவர்களின் கதையை செவி மடுத்து கேட்க அவகாசம் இல்லாத அளவுக்கு உலகம் அதிவேகமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. தினந்தோறும் அங்கு பெரும் குண்டு வெடிப்புகளின் ஓசையுடன் தான் அவர்களின் காலை பொழுது விடிகிறது. கடந்த அறுபது ஆண்டுகளில் தங்களின் சொந்த நிலத்திலேயே அகதிகளாக அலைகழிக்கப்படுவது மட்டுமின்றி மெல்ல மெல்ல தங்களின் நிலத்தையும் பறிகொடுத்து சிறு கீற்றான நிலப்பகுதிகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு காலனிகளாக குடியேறி மெல்ல மெல்ல பாலஸ்தீன மக்களின் நிலத்தை அபகரித்து இஸ்ரேல் உலக வரைபடத்தில் தன் இருப்பை ஏற்படுத்தி பின்னர் நிலைப்படுத்திக் கொண்டது. 1950கள் முதல் 2010 வரையிலான உலக வரைபடங்களை சேகரித்து அதனை ஒப்பிட்டு பார்த்தால் இந்த உண்மை யாவருக்கும் விளங்கும்.
15 லட்சம் மக்கள் வாழும் காசா பகுதி இருப்பதிலேயே மிகவும் துயர மேகங்கள் சூழ்ந்த பகுதி. இந்த காசா மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பாலஸ்தீனத்தின் நிலையை உலகிற்கு எடுத்துரைக்கவும் ஒரு பயணத்தை மேற்கொள்வது என ஆசியாவில் உள்ள முற்போக்காளர்கள் சிலர் தீர்மானித்த அது இப்பொழுது செயல் வடிவம் பெற்றுள்ளது. ஆசியாவின் 18 நாடுகளை சேர்ந்த 500 பேர் பாலஸ்தீனம் நோக்கி ஒரு பெரும் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள். தில்லியில் இருந்து கிளம்பி வாகா எல்லை வாயில் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து, பின்னர் அங்கிருந்து ஈரான், துருக்கி, சிரியா, லெபனன், ஜோர்டன், எகிப்து செல்கிறது பயணக்குழு. இந்த 7 தேசங்களையும் சாலை வழியாக பயணித்து கடப்பதும், வழி நெடுகிலும் பல நகரங்களின் பாலஸ்தீன ஆதரவு கருத்தரங்குகள், திரைப்படவிழாக்கள் என பெரும் ஏற்பாடுகள் எல்லா நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. எகிப்தின் அல்-அரீஷ் துறைமுகத்திலிருந்து கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு காசாவை சென்றடைந்து பயணக் குழு 2011 புத்தாண்டை அந்த மக்களுடன் கொண்டாட இருக்கிறது.
இந்த பயணக்குழுவில் 50 இந்தியர்கள் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் பயணக்குழுவில் செல்லும் ஒரே தமிழர் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் மட்டுமே. சமீபத்தில் அவர் எழுதிய காசா- அறங்கள் மடிந்த இடம் கட்டுரை குறுப்பிடதக்கது. அவர் தமிழ் சுழலில் தொடர்ந்து காத்திரமாக இயங்கி வருபவர், நிறைய கட்டுரைகளை எழுதியும் வருபவர்.
பாலஸ்தீன நிவாரண நிதிக்காக மக்களிடன் அவர் நன்கொடைகளை திரட்டி வருகிறார். இந்த மக்களுக்கு மருந்துகள், கட்டுமான பொருட்கள் என அவர்களின் அன்றாடங்களை சீர்படுத்தும் பல பொருட்களை வாங்குவதற்கு இந்த நிதி செலவிடப்படும்.

நிதி அளிக்க விருப்பம் உள்ளவர்கள்
A.MUTHUKRISHNAN அவர்களை +919443477353 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பணத்தை A.MUTHUKRISHNAN State Bank of India SB A/C no 30322814376 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தலாம். அல்லது A.MUTHUKRISHNAN பெயரில் காசோலை எடுத்து அனுப்பலாம்.

Sunday, July 19, 2009

நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு




சுந்தர ராமசாமி பெயரில் வருடம் தோறும் அறிவிக்கப்படும் இவ்விருது இதுவரை சரியான ஆளுமைக்கு போய் சேரவில்லை. கலை தன்மை, மொழிச்செரிவு,விசாலமான பார்வை,சமூக அறிவின்மைக்கு எதிரானகுரல்,வாழ்வின் மீதான மறுபரிசீலனை,ஜனநாகய சமூகத்தின் அடிப்படை குணாம்சத்தை பேணுதல் என்று தன் வாழ்நாளை செலவழித்தவரின் பெயரில் உருவாக்கப்பட்ட இவ்விருது சோத்துக்கு வழியிலாதவர், பொண்டாடி இல்லாமல் அவதிபடுபவர் என்று ரயில் டிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் சலுகையடிப்படையில் தரப்படுவதை நினைக்கும் போது காமிடி கீமிடி பண்றாங்களோ என்று எண்ணத் தேன்றுகிறது.
என்ன கொடுமை சார் இது?