Friday, July 31, 2009

ரா.மா பற்றின உங்கள் பதிவு

கடற்கரய் அவர்களுக்கு

ரா.மா பற்றின உங்கள் பதிவு படித்தேன். நன்று. இளைய தலைமுறை எழுத்தாளர்கள் படைப்புகள் பிரசுரமாவது பற்றி விசாரித்து தொந்தரவு கொடுக்கும் மாண்பின்மையை குறிப்பிட்டிருந்தீர்கள். ஆசிரியர் தனக்கு வரும் அனைத்து கவிதைகளையும் படித்து உடனே தீர்மானிக்க முடியாமல் போகலாம். இதனால் பொதுவாக பரிச்சயமுள்ள இளைய எழுத்தாளர்கள் அல்லது முன்னணி நட்சத்திரங்களின் படைப்புகளே கவனிக்கப்பட்டு பிரசுரமாகின்றன. எம்.ஜி ஆர் கல்லூரி மாணவன் ஆனது போல் ஒரு சிலர் மட்டுமே எத்தனை நாட்களுக்குத் தான் எழுதிக் கொண்டிருக்க முடியும்? சமீபத்தில் அறிவியல், தத்துவம், இலக்கியம் போன்ற தளங்களில் ஆழமாக எழுதக்கூடிய எத்தனை புதிய எழுத்தாளர்களை நமது பத்திரிகைகள் கண்டுபிடித்துள்ளன? நமது விமர்சனங்கள் வெறுமனே ரீடர்-ரெஸ்பான்ஸ் வகை தீர்க்கமான கருதுகோள்களோ அற்ற, நிறுவுதல்களோ அற்ற திசையற்ற எழுத்துக்களாக உள்ளது ஏன்? சூப்பர் ஸ்டாராகவோ, பத்திரிகயாள\குடி நண்பனாகவோ இருந்தால் மட்டுமே பிரசுர கவனம் கிடைக்கும் என்பது நமது தமிழ்ப்பரப்பில் உள்ள சடைவுக்கு காரணம் என்று கருதுகிறேன். மனுஷ்யபுத்திரனை அடிக்கடி போனில் அழைத்து பிரசுரம் பற்றி நச்சரிப்பவர்களை அவர் பொறுமையாக கையாள்வதை கவனித்திருக்கிறேன். இளைய எழுத்தாளர்களை அவரே அழைத்து உற்சாகப்படுத்தி தொடர்ந்து உயிரோசையில் இயங்க செய்கிறார். ஒரு ஆசிரியருக்கு இந்த பொறுமையும், திறமை அறியும் கூர்மையும் அவசியம். உயிரோசையின் மிகப்பெரிய வெற்றிக்கு இதுவும் காரணம்.

உங்கள் உரை நடையில் எளிதாக துல்லியமான சித்திரங்களை தருகிறீர்கள். மேலும் எழுடுங்கள் தொடர்ந்து படிக்கிறேன். உங்கள் கவிதைகள் பற்றி cognitive poetics (figure vs ground) முறைப்படி விமர்சித்து எழுத உத்தேசம் உள்ளது. விரைவில் எழுதுவேன்.

அன்புடன்
ஆர்.அபிலாஷ்
http://thiruttusavi.blogspot.com/